பெண்கள் தங்கள் முக அழகை அதிகரிக்க பார்லர் செல்ல வேண்டாம்.வீட்டில் இருக்கின்ற பொருட்களை கொண்டு முகத்தை வெள்ளையாக்கும் ட்ரிக்கை தெரிந்து கொள்ளுங்கள்.
ஸ்டெப் 01:
முதலில் காய்ச்சாத பால் சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் காட்டன் பஞ்சை போட்டு நினைத்து முகத்தை துடையுங்கள்.இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு இப்படி செய்ய வேண்டும்.
ஸ்டெப் 02:
பின்னர் கிண்ணம் ஒன்றில் அரிசி மாவு ஒரு தேக்கரண்டி,சுத்தமான தேன் ஒரு தேக்கரண்டி சேர்த்து நன்றாக குழைத்துக் கொள்ள வேண்டும்.இதை முகத்தில் தடவி ஸ்க்ரப் செய்ய வேண்டும்.விருப்பம் இருப்பவர்கள் இதில் பால் சேர்த்துக் கொள்ளலாம்.10 நிமிடங்கள் கழித்து முகத்தை நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 03:
பிறகு பாத்திரத்தில் சூடு நீர் ஊற்றி முகத்திற்கு ஆவி பிடிக்க வேண்டும்.இது மூன்றாவது படியாகும்.
ஸ்டெப் 04:
அடுத்து பாதாம் பருப்பை ஊறவைத்து தோல் நீக்கிவிட்டு பேஸ்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் கற்றாழை மடலில் இருந்து ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து பாதாம் பேஸ்ட்டில் போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.இதை முகத்தில் அப்ளை செய்து நன்றாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.பிறகு பன்னீர் கொண்டு முகத்தை கழுவி சுத்தப்படுத்த வேண்டும்.
ஸ்டெப் 05:
இறுதியாக இரண்டு தேக்கரண்டி கடலை மாவு,ஒரு தேக்கரண்டி தேன்,ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள்,ஒரு தேக்கரண்டி தயிர் போட்டு நன்கு கலக்க வேண்டும்.இதை பேஸ்ட் பதத்திற்கு கலந்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் காய வைக்க வேண்டும்.
பிறகு காய்ச்சாத பால் கொண்டு முகத்தை கழுவி சுத்தப்படுத்த வேண்டும்.இவ்வாறு செய்தால் பார்லர் பேஷியல் உணர்வு கிடைக்கும்.