மொபைல் போன்கள் திருட்டு போய்விட்டது என்று இனிமேல் வருத்தம் வேண்டாம்! இதோ அறிமுகமாக இருக்கும் புதிய வசதி! 

0
184
#image_title

மொபைல் போன்கள் திருட்டு போய்விட்டது என்று இனிமேல் வருத்தம் வேண்டாம்! இதோ அறிமுகமாக இருக்கும் புதிய வசதி! 

மொபைல் போன்கள் தொலைந்து போய்விட்டால் அல்லது திருடப்பட்டு விட்டால் அவற்றை கண்டுபிடிப்பதற்காக மத்திய அரசு புதுவிதமான செயலியை விரைவில் கொண்டு வர இருக்கிறது.

தொலைந்து போன மற்றும் திருடப்பட்ட செல்போன்களை மீட்கும் பொருட்டு புதிய வசதியை இந்த மே 17ஆம் தேதி முதல் மத்திய அரசு அமலுக்குக் கொண்டு வரவுள்ளது.  CEIR என்ற தொழில்நுட்ப அமைப்பின் இந்த வசதியினை வருகின்ற 17 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த  உள்ளதாக அதிகாரிகள் தரப்பு செய்தியானது கூறப்படுகிறது. 

தற்போது இந்த வசதியானது சோதனை அடிப்படையில் டெல்லி , மகராஷ்டிரா, கர்நாடகா, வடகிழக்கு பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  மேலும் நாடு முழுவதும் விரைவில் விரிவுபடுத்தப்பட இருப்பதாக  தொலைத்தொடர்பு துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. தற்போது அறிமுகம் ஆகும் இந்த வசதியினை பயன்படுத்தி  மொபைல் போன்கள் திருட்டு போனால் அவற்றை முடக்க முடியும் என்பதோடு மட்டுமில்லாமல் அவற்றை டிராக் செய்யவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்காக நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான். அது என்னவென்றால், CEIR இணைய சேவையகம் மூலமாக செல்போன்களை மீட்க, புகாரளித்த எஃப்.ஐ.ஆர் நகலை பயனர்கள் பதிவிட வேண்டும். மேலும் அதனுடன்  செல்போன் மாடல், IMEI எண்கள், திருடப்பட்ட இடம், செல்போன் எண் உள்ளிட்டவற்றை பதிவிட வேண்டும்.  நாம் பதிவு செய்த இந்த தகவலானது சரியாக இருக்கும் பட்சத்தில் 24 மணி நேரத்துக்குள்  உங்களது செல்போன் முடக்கப்படும். அதன்பின்னர் அவற்றை முறையாக கண்காணித்து மீட்பதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.