தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!! ஆசிரியர் பணிகளுக்கான தேர்வு முகாம்! உடனே விண்ணப்பியுங்கள்!.

0
86

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!! ஆசிரியர் பணிகளுக்கான தேர்வு முகாம்! உடனே விண்ணப்பியுங்கள்!.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி மற்றும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் மொத்தம் 13,331 காலியிடங்கள் உள்ளன. தற்காலிகமாக காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

இந்த காலிப்பணியிடங்களை தொகுப்பு ஊதியத்தின் அடிப்படையில் ஓராண்டுக்குள் நிரப்ப பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்ய கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அத்துடன் தற்காலிக ஆசிரியர் பணிக்கு நாளை மறுநாள் முதல் ஜூலை 6 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சரிபார்க்கப்பட்ட விண்ணப்பங்களின் விவரத்தை வரும் 6-ம் தேதி இரவுக்குள் ஆணையரகத்துக்கு பள்ளிகள் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து புதிய வழிகாட்டுதலில் படி பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 2022-23-ம் கல்வியாண்டில் காலியாகவுள்ள இடைநிலை / பட்டதாரி / முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரர்களிடமிருந்து எழுத்து மூலமான விண்ணப்பங்கள் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வித் தகுதி பெற்ற சான்றுகளுடன் தொடர்புடைய மாவட்டக் கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலே குறிப்பிட்டவாறு மாவட்டக் கல்வி அலுவலர் பெறும் விண்ணப்பங்களை விண்ணப்பதாரர் தற்காலிக நியமனம் கோரும் பள்ளித் தலைமையாசிரியருக்கு அனுப்பி வைக்கவேண்டும். பள்ளித் தலைமையாசியர் அறிவுரைகளை பின்பற்றி செயல்பட வேண்டும்.கல்வித்தகுதி இடைநிலை ஆசிரியர் பதவிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் ஒன் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் II தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

மாவட்டக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பதாரர்களது விண்ணப்பங்கள் மற்றும் கல்விச் சான்றுகளை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் / உதவி தலைமை ஆசிரியர் அல்லது மூத்த ஆசிரியரைக் கொண்ட குழு சரிபார்க்கவும். பின்னர் தகுதியானவர்களை வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும்.

அதனடிப்படையிலும் அவர்களது திறனை அறிய வேண்டும். தொடக்கக் கல்வித் துறையை சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் / குறுவள மைய / வட்டார வள மைய மேற்பார்வையாளர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர் ஆகியோரைக் கொண்ட குழு மேற்சொன்ன வழிமுறைகளின்படி தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும்.

தேர்வு செய்யப்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் குறித்த விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. படிவத்தில் பள்ளி வாரியாகவும், பதவி வாரியாகவும்,பாட வாரியாகவும் தயார் செய்து தேர்வு குழு உறுப்பினர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் கையொப்பத்துடன் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும்.

தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு தனியே வருகைப் பதிவேடு மற்றும் மதிப்பூதியம் வழங்கப்பட்டதற்கான பதிவேடு மட்டும் இணைக்கப்பட வேண்டும்.மேற்கூறிய அனைத்தும் விருப்பம் உள்ள ஆசிரியர்கள் விண்ணப்பங்களை விண்ணப்பியுங்கள்.உங்களுக்காண பணி உறுதி.

author avatar
Parthipan K