தமிழகத்தில் இ-பாஸ் ரத்து செய்ய அதிக வாய்ப்பு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்

0
55

தமிழகத்தில் இ- பாஸ் நடைமுறையை ரத்து செய்ய அதிக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. கடந்த இரண்டு மாதமாக ஊரடங்தில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.அவற்றில் இ-பாஸ் வாங்கி மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லலாம் என்றும் மாநிலம் விட்டு மாநிலம் செல்லலாம் என்றும் அறிவுறுத்தியது.

இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசு மாநிலத்திற்குள் செல்லவும், மாநிலத்திற்கு வெளியே செல்லவும் இ-பாஸ் தேவையில்லை என அறிவித்தது. ஆனால் ,தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களுக்குள் செல்லவும், மாநிலங்களில் இருந்து வெளியே செல்லவும் இ-பாஸ் கட்டாயம் என்று அறிவுறுத்தியது. இது பொதுமக்களிடையே பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது.

நேற்று மத்திய அரசு அனைத்து மாநில செயலாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் மாவட்டங்களுக்கு உள்ளேயும் வெளியும் செல்லவும் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்லவும் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது.

மத்திய அரசின் இந்த உத்தரவை ஏற்று புதுச்சேரியில் இன்று முதல் இ-பாஸ் ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்லவும் இ-பாஸ் தேவையில்லை என அம்மாநில முதல்வர் நாராயணசாமி அவர்கள் தெரிவித்திருந்தார். அதே போல பிற மாநிலங்களில் இருந்து புதுச்சேரி வருவதற்கும் இ-பாஸ் தேவையில்லை என்று அவர் கூறியிருந்தார். எனவே அடுத்து தமிழகமும் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இம்முறை ஊரடங்கு குறித்து செய்திகள் வெளியிடும் போது இ-பாஸ் ரத்தாகிறது என அறிவிப்பு வெளியாகும் என பலர் எதிர்பார்க்கப்படுகின்றன.

 

author avatar
Parthipan K