ADMK: அதிமுகவில் உட்கட்சி பனிப்போரானது சற்று கரைந்த வண்ணமாக உள்ளது. எடப்பாடி மற்றும் செங்கோட்டையன் இடையே இருந்த வந்த சஞ்சலமானது சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரும் போது சரியானது. அதே சமயம் தான் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி இடையே உள்ள கருத்து வேறுபாடும் குறைந்தது. சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றிய போது, ஓபிஎஸ் குரல் வாக்கெடுப்பு மற்றும் டிவிஷன் வாக்கெடுப்பு உள்ளிட்டவற்றில் ஆதரவு அளித்திருந்தார். அதேபோல பட்ஜெட் தாக்கலின் போது தென்னரசுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
அக்கணமே எடப்பாடியை ஆதரித்து பின்னணியில் இருந்து ஓபிஎஸ், அமைச்சருக்கு எதிராக பல கேள்விகளை எழுப்பினார். இவையனைத்தும் அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ் இணக்கமாவதற்கான வழிபோல் உள்ளது என கூறுகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் மற்றும் சசிகலா தினகரன் உள்ளிட்ட அணியினருடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று பலமுறை கூறியுள்ளார். ஆனால் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் திமுகவை எதிர்க்க பக்கபலமான கூட்டணி தேவை. இதனின் முதற்கட்டமாக விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இது முடிவுக்கு வராத பொருட்டு ஓபிஎஸ் மீண்டும் கட்சிக்குள் இணைக்க அதிக வாய்ப்புள்ளது என கூறுகின்றனர். ஆனால் ஒருபோதும் சசிகலாவையோ அல்லது தினகரனையோ கட்சிக்குள் விடமாட்டேன் என்ற எண்ணத்தில் உள்ளாராம். அதேபோல அதிமுக பாஜகவுடன் நெருக்கம் காட்டும் என எண்ணி வந்தவர்களுக்கு தற்போது அவர்களுக்குள் நடக்கும் எதிரும் புதிரான போட்டியானது கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என்பதை தான் உறுதிப்படுத்துகிறது.
இதை வைத்து பார்க்கையில் சட்டமன்றத் தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி அமையும் அல்லது மீண்டும் அதிமுகவை ஒருங்கிணைக்க எடப்பாடி அவர்கள் ஓபிஎஸ்-ஐ உள் கொண்டு வரலாம் எனக் கூறுகின்றனர். மேற்கொண்டு இருக்கும் நிர்வாகிகளை சிதற விடக்கூடாது என்பதற்காகவே செங்கோட்டையனிடம் இணக்கம் காட்டியுள்ளார் என்றும் கூறுகின்றனர்.