குழு  பகவதி நகர் முகாமிலிருந்து 6,200 க்கும் மேற்பட்ட பக்தர்கள்!! பனிலிங்க தரிசனம்!! 

0
33
Over 6,200 Devotees from Team Bhagwati Nagar Camp!! Banilinga darshan!!
Over 6,200 Devotees from Team Bhagwati Nagar Camp!! Banilinga darshan!!

குழு  பகவதி நகர் முகாமிலிருந்து 6,200 க்கும் மேற்பட்ட பக்தர்கள்!! பனிலிங்க தரிசனம்!!

அமர்நாத் யாத்திரை சென்றால் பாவங்கள் விலகும் என்றும் பலர் நம்பிகிறார்கள். அமர்நாத்தில் உள்ள குகை கோவில் 5000 ஆண்டுகள் பழைமையானது என்று புராணங்களில் உள்ளது. இந்த குகை கோயில் கடல் மட்டத்திலிருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைத்துள்ளது.

இந்த கோவிலை முதன் முதலில் கண்டுபிடித்தவர் பிருகு முனிவர். ஆண்டுதோறும் அமர்நாத் பனி லிங்கத்தை  தரிசிக்க  லச்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை வருவது வழக்கம். மேலும் இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 01 ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த பயணத்தை மேற்கொள்வதற்கு பக்தர்களுக்கு பல ஏற்பாடுகள் செய்து தரப்பட்டுள்ளது. இந்த யாத்திரை 62 நாட்கள் நடைபெற இருந்தது. இந்த நிலையில் அமர்நாத் பனி லிங்ககஹ்தை தரிசனம் செய்ய லச்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை பயணத்தை மேற்கொண்டார்கள்.

சில நாட்கள் முன்பு யாத்திரை செல்லும் பகுதிகளில் மோசமான வானிலை யாத்திரை  தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது பயணம் மீண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதனையடுத்து இந்த குகை கோவிலுக்கு செல்ல இரண்டு வழிகள் உள்ளது. இதற்கு பால்டால் வழியாக சென்றால் 3 முதல் 4 நாட்கள் வரை ஆகும். மேலும் இதற்கு ஹெலிகாப்டர் சேவைகளும் உள்ளது.

இந்த நிலையில் 16  நாட்களில் முடித்த நிலையில் இதுவரை 2,29,221  லட்சம் பக்தர்கள் குகை கோயிலை தரிசனம் செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது. அதனையடுத்து 6,200 பேர் அடங்கிய குழு  பகவதி நகர் முகாமிலிருந்து சென்றுள்ளர்கள். மேலும் இந்த புனித பயணத்தில் 20க்கும் மேற்பட்ட  பேர் உயிரிழந்துள்ளர்கள் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து பகதர்கள் வசதிகளுக்கு மருத்துவ முகாம்கள் மற்றும் சமையலறைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்னும் லச்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்யள்ளதாக கூறப்படுகிறது. அதனையடுத்து அதிகாரிகள் 62 நாட்ககுள் அமர்நாத் புனித யாத்திரையை 10 லட்சத்திற்கு மேற்பட்ட பகதர்கள் சுவாமி தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Jeevitha