சந்தோஷ் நாராயணனோடு பெரிய சண்டை இல்லை… இயக்குனர் பா ரஞ்சித் பதில்!

0
87

சந்தோஷ் நாராயணனோடு பெரிய சண்டை இல்லை… இயக்குனர் பா ரஞ்சித் பதில்!

இயக்குனர் பா ரஞ்சித் கடந்த சில படங்களாக அவரின் ஆஸ்தான இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணனை விலக்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பா.ரஞ்சித் இருந்து வருகிறார்.இவர் இதுவரை தமிழில் ஐந்து திரைப்படங்களை இயக்கி உள்ளார்.ஆனால் குறுகிய காலத்திலேயே இவரின் திரைப்படங்கள் அதிக அளவில் பேசப்பட்டன.மேலும் வெற்றியும் பெற்றன.இதற்குக் காரணம் இவரின் படங்கள் அரசியல் சார்ந்து இருக்கும்.2012ம் ஆண்டு இவர் இயக்கிய அட்டகத்தி திரைப்படம் மூலம் இவர் இயக்குனராக அறிமுகம் ஆனார்.

இவரின் முதல் ஐந்து படங்களுக்குமே இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன்தான் பணியாற்றினார். இருவரின் கூட்டணியில் உருவான பாடல்கள மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. ஆனால் சார்பட்டா பரம்பரைக்கு பிறகு இந்த கூட்டணி பிரிந்தது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவே இந்த கூட்டணி பிரிந்ததாக சொல்லப்படுகிறது.

நட்சத்திரம் நகர்கிறது படத்துக்கு தென்மாவும், விக்ரம் படத்துக்கு ஜி வி பிரகாஷும் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளனர். இந்நிலையில் தற்போது பா ரஞ்சித் அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் சந்தோஷ் நாராயணன் உடனான சண்டை குறித்து பேசியுள்ளார். முன்னணி ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் “இருவரும் இணைந்து 5 படங்களில் பணியாற்றியுள்ளோம். வேறு கலைஞர்களோடு பணியாற்ற வேண்டும் என நான் ஆசைப்பட்டேன். அதற்காக நாங்கள் இணைந்து பணியாற்றவே மாட்டோம் என்றில்லை. அந்த அளவுக்கு நாங்கள் சண்டையிடவில்லை. நான் அழைத்தால் அவர் என் படத்தில் பணியாற்றுவார் என்றுதான் நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.