தண்ணீருக்கு தத்தளிக்கும் பாகிஸ்தான்.. சிந்து நிதி கிடைக்க வாய்ப்பே இல்லை!! மெகா பிளானை இறக்கிய இந்தியா!!!

Photo of author

By Rupa

தண்ணீருக்கு தத்தளிக்கும் பாகிஸ்தான்.. சிந்து நிதி கிடைக்க வாய்ப்பே இல்லை!! மெகா பிளானை இறக்கிய இந்தியா!!!

Rupa

Pakistan is drowning in water.. There is no chance of getting the Indus Fund!! India has launched a mega plan!!!

India Pakistan: பாகிஸ்தானியர்களுக்கு நீரின் ஆதாரமாக விளங்குவது இந்த சிந்து நதி தான். பகல்ஹாம் தாக்குதலின் எதிரொலியாக இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீரை தடுத்தது. இதனால் கொந்தளித்த பாகிஸ்தானியர் இந்தியாவில் இரத்த வெள்ளம் ஓடும் என சவால் விட்டனர். ஆனால் அவர்களின் தாக்குதல் எதுவும் இந்தியாவிற்கு பாதிப்பை தரவில்லை. இந்த போரை முடித்துக் கொள்ளலாம் என்று பேச்சுவார்த்தை நடத்தவும் ஆரம்பித்தனர். ஆனால் அதுவும் கை கொடுக்காததால் உலக நாடுகள் மத்தியில் உதவி கேட்டு வருகின்றனர்.

ஆனால் இந்தியா சிந்தூர் என்ற ஆப்ரேஷனை செய்து வெற்றியடைந்ததை அடுத்து கட்டாயம் சிந்து நதிநீரை பாகிஸ்தானுக்கு அனுப்பக்கூடாது என முடிவெடுத்துள்ளனர். அதன்படி சிந்து நதி நீர் இந்தியாவில் பஞ்சாப், இமாச்சல பிரதேஷ் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதற்கான வேலைப்பாடுகளை செய்து வருகின்றனர். குறிப்பாக பாகிஸ்தானில் எந்த நீரும் சென்று விடக்கூடாது என்பதற்காக சிந்து நிதியை இந்தியாவின் பிரதி பிஎஸ் நதிகளுடன் இணைக்க முடிவு செய்துள்ளனர்.

அதன்படி மெகா கால்வாய் மூலம் நீரை இறக்கி பஞ்சாப்பிற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இந்த சிந்து நதிநீரானது கங்கை வரை கொண்டு செல்லப்படும் என கூறப்படுகிறது. கிட்டத்தட்ட இந்த பணி முடிவடைய இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகிவிடும். மற்றொருபுறம் நீர் தேக்கம் அதிகமாகி பாகிஸ்தானுக்கு செல்லக்கூடாது என்பதற்காக ஹரியானா கால்வாயில் உள்ள சேதங்களையும் சரி செய்து வருகின்றனர். இதனால் பாகிஸ்தான் தான் உச்சகட்ட பிரச்சனையில் உள்ளது.