அயலானுடன் மோதும் அரண்மனை4!!! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள படக்குழு!!!

0
31
#image_title

அயலானுடன் மோதும் அரண்மனை4!!! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள படக்குழு!!!

இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் அரண்மனை 4 திரைப்படத்தின் வெளியீடு பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பினை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது.

இயக்குநர் சுந்தர் சி இயக்கி அவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து 2014ம் ஆண்டு அரண்மனை திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது. இதையடுத்து அரண்மனை திரைப்படத்தின் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் என்று அடுத்தடுத்து வெளியானது.

அரண்மனை 2 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இருந்தும் அரண்மனை 3 திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இதையடுத்து அரண்மனை திரைப்படத்தின் 4வது பாகம் எடுக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

அரண்மனை 4 திரைப்படத்தில் இயக்குநர் சுந்தர் சி அவர்களும் முக்கியமான காப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் நடிகை தமன்னா, நடிகை ராஷி கண்ணா, நடிகர் சந்தீப் பிரதாப் இவர்களும் அரண்மனை 4 திரைப்படத்தில் நடிக்கின்றனர். இரண்டாம் பாகத்திற்கு இசையமைத்த ஹிப்ஹாப் ஆதி அரண்மனை 4 திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் படக்குழு தற்பொழுது முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.

அதன்படி அரண்மனை 4 திரைப்படம் 2024ம் ஆண்டு பொங்களுக்கு வெளியாகும் என்று படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.