இந்திய அணியின் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விலகும் Paytm… முன்னணி நிறுவனம் ஒப்பந்தம்

0
231

இந்திய அணியின் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விலகும் Paytm… முன்னணி நிறுவனம் ஒப்பந்தம்

இந்திய அணியில் டைட்டில் ஸ்பான்சராக Paytm நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) உள்நாட்டில் சர்வதேச கிரிக்கெட்டுக்கான நீண்டகால டைட்டில் ஸ்பான்சர் – Paytm ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்குகிறது. அந்த நிறுவனத்துக்குப் பதிலாக மாஸ்டர்கார்டு உள்நுழைகிறது. Paytm 2023 ஆம் ஆண்டின் இறுதி வரை உரிமைகளை வைத்திருந்தது. முன்னதாக BCCI ஜெர்சி உரிமையை Oppo நிறுவனத்திடம் இருந்து கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தகக்து.

“மாஸ்டர்கார்டு Paytm-ன் அதே விதிமுறைகளில் வரும்” என்று பிசிசிஐ அதிகாரிகள் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. 2019 அக்டோபரில் தொடங்கும் நான்கு ஆண்டு சுழற்சிக்காக Paytm ₹326.8 கோடியை செலவிட்டுள்ளது, இது ஒரு போட்டிக்கு ₹3.8 கோடியாக அமைந்தது.

பிசிசிஐ ஜெர்சி ஸ்பான்சர்களான பைஜுவின் -அவர்களின் ஒப்பந்தம் சமீபத்தில் 2023 ODI WC வரை நீட்டிக்கப்பட்டது – 86.21 கோடி ரூபாய் நிலுவைத் தொகையும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஆனால் அந்த தொகை ஒப்பந்தம் கையெழுத்தானதும் அளிக்கப்படும் என பைஜூஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

Previous article புதிய கட்டுப்பாடுகள் அமல்! மீண்டும் ஊரடங்கு  போடப்படும் நிலையா?
Next article”சிம்புவின் திருமணம் எப்போது…” – பழைய உற்சாகத்தோடு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய TR

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here