மக்களே அலார்ட்!! பெரும் சீரழிவை சந்திக்கும் தமிழகம்.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்!! 

0
167
People alert!! Tamil Nadu is going through a major deterioration.. Shocking information has come out!!
People alert!! Tamil Nadu is going through a major deterioration.. Shocking information has come out!!

மக்களே அலார்ட்!! பெரும் சீரழிவை சந்திக்கும் தமிழகம்.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

இயற்கை சூழல் தொடர்ந்து மாறுவதால் காலநிலை மாற்றம் உண்டாகி உலக நாடுகளுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் விதமாக காலநிலை மாற்றம் உண்டாகி  விடுகிறது.அந்த வகையில் இந்த காலநிலை மாற்றத்தால் எந்தெந்த நாடுகள் மற்றும் மாநிலங்கள் பெரும் பாதிப்பை அடையும் என்று ஆஸ்திரேலியாவை சேர்ந்த எஸ் டி ஐ ஆய்வு நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 2050 ஆம் ஆண்டு எத்தனை மாநிலங்கள் யாரும் எதிர்பாராத வகையில் காலநிலை மாற்றத்தை சந்திக்கும் என்பதை கூறியுள்ளனர்.

அவர்கள் கூறியதில் கிட்டத்தட்ட 2600 க்கும் அதிகமான மாநிலங்கள் அதாவது இந்தியாவில் மட்டும் உள்ள 2600 க்கும் அதிகமான மாநிலங்கள் காலநிலை மாற்றத்தை சந்திக்கும் என தெரிவித்துள்ளனர். இதில் மிகவும் அச்சப்பட வேண்டிய தகவல் என்னவென்றால் முதல் பத்து இடங்களில் ஒன்பதாவது இடத்தை நமது தமிழகம் பிடித்துள்ளது.

2050 ஆம் ஆண்டில் பெரிய காலநிலை மாற்றம் தமிழகத்தில் ஏற்பட்டு சீரழிவுகள் உண்டாகும் எனக் கூறுகின்றனர். மேலும் இந்தியாவில் முதலாவது இடத்தில் பீகார், இரண்டாவது இடத்தில் உத்தர பிரதேசம், மூன்றாவது இடத்தில் அசாம் என்று அடுத்தடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ஒரு ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி தான் தற்பொழுது பாகிஸ்தானில் சிந்து மாநிலத்தில் யாரும் எதிர் பார்க்காத வகையில் வெள்ளம் சூழ்ந்து அம்மாநில மக்கள் அனைவரும் பெரும் பாதிப்பை சந்தித்தனர். எனவே தற்பொழுது இவர்கள் கணித்துள்ள இந்த கணிப்பு குறித்து தமிழகம் அதிக அளவு காலநிலை மாற்றத்தை சந்திக்கும் எனவும் இதனால் மக்கள் பெருமளவில் அவதிப்படும் சூழல் உண்டாகும் எனவும் கூறிகின்றனர்.