வீட்டு வாசலில் கோலம் போடுபவர்கள் கவனத்திற்கு.. தெரியாமல் கூட இந்த தவறை மட்டும் செய்துவிடாதீங்க!!

Photo of author

By Divya

வீட்டு வாசலில் கோலம் போடுபவர்கள் கவனத்திற்கு.. தெரியாமல் கூட இந்த தவறை மட்டும் செய்துவிடாதீங்க!!

Divya

நம் தமிழ் பாரம்பரியத்தில் பல பயனுள்ள விஷயங்கள் கால காலமாக பின்பற்றப்படுகிறது.இதில் காலையில் வீட்டு வாசலில் சாணம் தெளித்து கோலமிடுவது மங்களகரமான செயலாக பார்க்கப்படுகிறது.காலையில் எழுந்து வீட்டு வாசலை பெருக்கி சுத்தம் செய்துவிட்டு சாணம் தெளித்து அரிசி மாவில் கோலமிடுவதை தொடர்ந்து பின்பற்றி வருகின்றோம்.

மார்கழி மாதம் மட்டுமின்றி வெள்ளிக்கிழமை,சுப தினங்களில் கோலமிடுவதை பெண்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.பச்சரிசி மாவில் கோலமிடுவதால் இரும்பு,பூச்சிகளுக்கு அது உணவாக மாறுகிறது.இது ஒருவகையில் தானத்திற்கு இணையாகும்.

சிக்கல் இல்லாத கோலங்களை இடுதல் நல்லது.பூகோலமிடுதல் ஒருவித நேர்மறை எண்ணத்தை நமக்கு கொடுக்கும்.அதேபோல் கோலத்திற்கு நடுவில் பூசணி பூ அல்லது பிள்ளையார் வைத்தல் இன்னும் சிறப்பு.

வெள்ளிக்கிழமை நாளில் செம்மண் பயன்படுத்தி கோலமிட்டால் பல நேர்மறை ஆற்றல் உண்டாகும்.வெறும் தண்ணீர் தெளிப்பதற்கு பதில் சாணம் தெளித்தால் வீட்டில் கிருமிகள் அண்டாமல் இருக்கும்.வீட்டு வாசலில் கோலமிடுதல் மங்களகரமான செயலாக பார்க்கப்படுகிறது.

அதேபோல் கோலமிடுதல் மனதிற்கு ஒருவித மகிழ்வை தருகின்றது.கோலமிட்ட பிறகு மண் விளக்கை கோலத்தின் நடுவில் வைத்து தீபம் ஏற்றினால் வீட்டில் லட்சுமி கடாச்சம் பெருகும்.வாரத்தில் ஏழு தினங்களும் கோலமிட முடியவில்லை என்றாலும் வெள்ளிக்கிழமை நாளில் தலைக்கு குளித்துவிட்டு வாசல் பெருக்கி சாணம் தெளித்து கோலமிட்டால் வீட்டில் தெய்வ சக்தி அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

சூரிய உதயத்திற்கு முன்பு வாசலில் கோலமிட வேண்டும்.உப்பு பயன்படுத்தி கோலமிடுவதை தவிர்க்க வேண்டும்.உப்பு லட்சுமி தேவி குடியிருக்கும் இடம் என்பதால் இதை கோலமிட பயன்படுத்தினால் கால் மிதிபட்டுவிடும்.இதனால் லட்சுமி தேவியின் அருள் நமக்கு கிடைக்காமல் போய்விடும்.எனவே கோலமிட உப்பு பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு பச்சரிசி மாவு,செம்மண் போன்றவற்றை பயன்படுத்தலாம்.