உயராத பெட்ரோல் டீசல் விலை! மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!

0
75

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றனர்.

நாடு முழுவதும் நோய்த்தொற்று ஏற்படுவதை தடுப்பதற்காக மார்ச்சு மாதம் கடைசியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் இருந்த இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்துஸ்தான் பெட்ரோலியம் பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட நிறுவனங்கள் ஜூன் மாதம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி வருகின்றன.

இந்த சூழ்நிலையில், இன்றைய தினம் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் விலை 102 ரூபாய் 49 காசுக்கும் ஒரு லிட்டர் டீசலின் விலை 94 ரூபாய் 39 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.