PMK: பாமகவின் பொதுக்குழு கூட்டம் ஒன்றில் அப்பா மற்றும் மகன் இருவருக்கும் மகள் வழி பேரனான முகுந்தனை இளைஞரணி தலைவராக நியமிப்பது குறித்து மேடையிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சி தற்போது உச்சகட்ட நிலையை அடைந்துள்ளது. அந்த வகையில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் ராமதாஸ், அன்புமணி குறித்து பல குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். மேற்கொண்டு வன்னியர் சங்க சொத்துக்கள் என அனைத்தும் பொதுமக்களுக்கு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இருக்கையில் பாமகவின் பொருளாளர் திலக பாமகவை கட்சியிலிருந்து நீக்கம் செய்து ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். இது ஒரு பக்கம் இருக்க தனியார் மண்டபம் ஒன்றில் தொடர் மூன்று நாட்கள் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடக்க இருப்பதாக மாவட்ட செயலாளர்களுக்கு அன்புமணி அழைப்பு விடுத்துள்ளார். அதில் 23 பேரில் 22 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதில் பொருளாளர் திலகபாமாவும் பங்கேற்றுள்ளார். கட்சி ரீதியாக வங்கியிலிருந்து பணம் எடுக்க வேண்டுமென்றால் கட்டாயம் திலகபாமா கையெழுத்து போட வேண்டும். இதனால்தான் ராமதாஸ் முதல் செக்மேட் ஆக திலகபாமாவை கட்சியிலிருந்து நீக்கம் செய்துள்ளார்.
இவருக்கு மாற்றாக திருப்பூரை சேர்ந்த மன்சூர் என்பவரை பொருளாளராக நியமித்துள்ளார். இப்படி இருக்கையில் ஒரு சில மணி நேரத்திலேயே அன்புமணி பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார். அதில் திலகபாமா பொருளாளராக கட்சியில் நீட்டிப்பார் எனக் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி பாட்டாளி மக்கள் சொத்து என்பது தனி நபருக்கு கிடையாது மேற்கொண்டு தொண்டர்கள் இல்லாமல் பாமக என்பது இல்லை.
நான் அடிமட்ட தொண்டனாக கூட கட்சிக்கு செயல்பட தயார். மேலும் பொறுப்புகள் என்பது இன்றைக்கும் நாளைக்கும் நிச்சயம் இல்லாதது, வரும் போகும் இதனால் நமக்குள் எந்த வேறுபாடும் இருக்கக் கூடாது என தெரிவித்தார். அத்தோடு இது ரீதியாக பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்று நடத்தி ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேற்கொண்டு அனைத்து நிர்வாகிகளும் எப்பொழுதும் போல முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.