கண்ணில் கருமை நிற போட்டதால் பார்வை இழந்த பாடகி: அதிர்ச்சி தகவல்

0
190

போலந்து நாட்டை சேர்ந்த ஒருவர் கண்ணில் கருமை நிற போட்டதால் பார்வை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

போலந்து நாட்டைச் சேர்ந்த ராப் இசை பாடகி அலெக்ஸாண்ட்ரா. இவர் பிரபல பாப் பாடகர் போபெக் என்பவரின் தீவிர ரசிகையாக இருந்தார். சமீபத்தில் போபெக் கண்ணில் டாட்டூ போட்டு கொண்டதைப் பார்த்து தானும் அதே போல் டாட்டூ போட வேண்டும் என விரும்பி டாட்டூ போடும் ஒரு நபரை அணுகி உள்ளார்

டாட்டூ போடுவதில் அனுபவமற்ற அந்த நபர் பணத்துக்கு ஆசைப்பட்டு அலெக்சாண்டரின் கண்ணில் டாட்டூ போட்டு உள்ளார். இந்த நிலையில் டாட்டூ போட்டவுடன் கண் எரிச்சல் மற்றும் வலி இருந்ததையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனை சென்று பார்த்தபோது அலெக்சாண்டரின் இடதுகண் முழுவதும் பாதிக்கப்பட்டு பார்வை இழப்பு ஏற்பட்டுவிட்டதாகவும், மிக விரைவில் வலது கண் பார்வையும் இல்லாமல் போய்விடும் என்றும் கூறியுள்ளார்

மேலும் இதனை சரி செய்யவே முடியாது என்றும் டாக்டர் தெரிவித்தது அலெக்ஸாட்ராவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் டாட்டு போட்டவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் டாட்டூ மோகத்தால் கண்பார்வை இழந்த பாடகியின் பரிதாபம் நிலையில் அந்த பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Previous articleதிமுகவிற்கு உச்சத்தில் இருக்கும் ராகு கேது! அடுத்தடுத்த நிகழ்வுகளால் அமைதியான அறிவாலயம்!!
Next articleபி.ஈ. படித்தவர்கள் விண்ணப்பித்த வேலை: வேலையில்லா திண்டாட்டத்தின் கொடுமை!