பொன்னியின் செல்வன் டீசர் நிகழ்வில் கலந்துகொள்ளாத விக்ரம்… இன்று மாலை ஸ்பெஷல் அப்டேட்!

0
50

பொன்னியின் செல்வன் டீசர் நிகழ்வில் கலந்துகொள்ளாத விக்ரம்… இன்று மாலை ஸ்பெஷல் அப்டேட்!

இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாக டீசர் சமீபத்தில் வெளியானது.

இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய 30 ஆண்டுகால கனவுப் கனவுப் படைப்பாப பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தோட்டாதரணி கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே முழுவதுமாக நிறைவடைந்து விட்டது. செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி பொன்னியின் செல்வன் -1 ரிலீஸ் ஆக உள்ளது. இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் படத்தின் டீசர் வெளியானது. உடல்நலக்குறைவு காரணமாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் நடிகர் விக்ரம் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில் இன்று மாலை விக்ரம் ஸ்பெஷலாக அப்டேட் ஒன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தைப் பற்றி விக்ரம் பேசும் வீடியோ வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என இயக்குனர் மேல் விக்ரம் அதிருப்தியில் இருப்பதாக தகவலகள் பரவியது குறிப்பிடத்தக்கது.

http://https://www.instagram.com/p/Cf6kDZtPMFU/?utm_source=ig_web_copy_link