அரசு உத்தரவில்லாமல் முன்பதிவை துவங்கிய பேருந்து நிறுவனங்கள் – உஷார் மக்களே

0
243

தற்போது நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கும் கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன.ஆம்னி பஸ் என்று அழைக்கப்படும் தனியார் பேருந்து சேவை முற்றிலுமாக முடங்கியுள்ளது.
இதனிடையே பல மாநில அரசுகள், சமூக இடைவெளியுடன் போக்குவரத்தைத் தொடங்க முடிவு செய்த நிலையில், மீண்டும் பேருந்து சேவையை துவங்க ஆம்னி பேருந்துகள் என கூறப்படும் தனியார் பேருந்துகள் அரசின் உத்தரவுக்காக காத்திருந்தன.

வரும் மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டது. ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்திருந்தாலும், பேருந்து சேவையை துவங்குவதை பற்றி அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதனால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் தனியார் பேருந்து நிறுவனங்கள் ஏமாற்றமடைந்தன.

இந்நிலையில் அரசின் எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ள தனியார் பேருந்து நிறுவனங்கள் இரண்டு மடங்கு டிக்கட்டின் விலை ஏற்றி வைத்து ஜூன் 1ம் தேதி முதல் பயணத்தை மேற்கொள்ளும் வகையில் இணையத்தில் முன் பதிவு செய்ய துவங்கியுள்ளது.

தமிழக்த்தினிடையே பேருந்தை இயக்கவே அரசு அனுமதி தருமா என இன்னும் தெரியாத நிலையில் அனைத்து தமிழக மாவட்டங்கள், ஆந்திரா, கர்னாடாகா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் முன் பதிவை இந்நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.

ஏற்கனவே இதை போல் விமான முன் பதிவு செய்தவர்களுக்குப் பணத்தை திரும்ப அளிக்காத விமான நிறுவனங்கள் இழுத்தடித்து வரும் நிலையில், அனுமதியே இல்லாமல் பேருந்து சேவைக்கு முன்பதிவை மேற்கொள்ளும் பேருந்து நிறுவனத்திடம் உஷாராக இருங்கள் மக்களே.

அரசின் அறிவிப்பு வரும் வரை காத்திருந்து பின்னர் முன் பதிவை மேற்கொள்ளுங்கள்.

Previous articleபள்ளி திறப்பு தேதியை அறிவித்த ஆந்திரா – தமிழகமும் இதை பின்பற்றுமா?
Next articleகூடலூர் அருகே பழங்கால தாழி கண்டெடுப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here