அரசியல்வாதிகளின் அந்தரங்க வீடியோ! மோசடி ராணியின் சொத்துக்கள் பறிமுதல்!

0
231

அரசியல்வாதிகளின் அந்தரங்க வீடியோ! மோசடி ராணியின் சொத்துக்கள் பறிமுதல்!

பெரும் பணக்காரர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோரை குறி வைத்து ஏமாற்றிய மோசடி ராணி அர்ச்சனாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

அர்ச்சனாவின் மோசடி வலையில் எம்பி, எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகள், பெரும் பணக்காரர்கள், சினிமா பிரபலங்கள், உள்ளிட்டோர் சிக்கி உள்ளனர்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரரை சேர்ந்த பழைய கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்த ஜெக்பந்து சந்த். இவரின் மனைவி அர்ச்சனா நாக் வயது 26 இவர் அழகு நிலையம் நடத்தி வந்தார்.

இதனிடையே சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அர்ச்சனாவும் அவரது கணவரும் ஏராளமான தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், ஆகியோரை  குறி வைத்து ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டு பணம் கறந்துள்ளனர்.

கார் மற்றும் பைக் விற்பனை மூலம் அர்ச்சனாவும் அவரது கணவரும் அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களுடன் நெருங்கி பழகியுள்ளனர். இதையடுத்து சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்களுக்கு பெண்களை பாலியல் தொழிலுக்கு சப்ளை செய்துள்ளனர். அவர்கள் தனியாக இருக்கும் அந்தரங்க வீடியோக்களை அவர்களுக்கு தெரியாமல் பதிவு செய்துள்ளனர்.

ரகசியமாக எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடாமல் இருக்க வேண்டும் எனில் கேட்ட பணத்தை தர வேண்டும் என அவர்களை மிரட்டி உள்ளனர். இதனால் மிரட்டலுக்கு அஞ்சி படங்கள் வெளியானால் தங்களுக்கு மானம் போய்விடும் என்பதால் ஏராளமான அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் அர்ச்சனாவும் அவரது கணவரும் கேட்ட பணத்தை கொடுத்துள்ளனர். இந்த பணத்தைக் கொண்டு அர்ச்சனா சொகுசான வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனது அந்தரங்கமான வீடியோவை வைத்துக்கொண்டு ரூ 3 கோடி பணம் கேட்டு மிரட்டுவதாக சினிமா தயாரிப்பாளர் ஒருவர் அர்ச்சனாவின் மீது புகார் கொடுத்து இருந்தார்.  இதன் அடிப்படையில் அர்ச்சனாவையும் , அவரது கணவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த நான்கு செல்போன்கள்,  இரண்டு டேப்லெட்டுகள், லேப்டாப் மற்றும் பென்டிரைவ் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 18 எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் உட்பட 25 பேர் அர்ச்சனாவின் நெட்வொர்க்கில் உள்ளனர் என தெரியவந்துள்ளது. பண மோசடி வழக்கு என்பதால் அமலாக்கத் துறையும் விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் அர்ச்சனாவின் 56 லட்ச ரூபாய் சொத்துக்களை ஏற்கனவே  அமலாக்கத்துறை முடக்கிய  நிலையில்  தற்போது அவரின் 3.64 கோடி மதிப்புள்ள அரண்மனை போன்ற அவரின் சொகுசு வீட்டினையும் அமலாக்க துறையினர் முடக்கியுள்ளனர்.