தெலுங்கு திரையுலகின் டாப் ஹீரோவுடன் இணையவிருக்கும் பிரியா பவானி சங்கர் !!!

0
88

நாகர்ஜுனா நடித்த மனம் மற்றும் சூர்யாவின் 24 உள்ளிட்ட படங்களில் படங்களை இயக்கியவர் விக்ரம் குமார். கடந்த ஆண்டு  நானி நடிப்பில்வெளியான கேங் லீடர் படத்தை இயக்கியிருந்தார்.

இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்திற்கு பிறகு விக்ரம் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நாக சைதன்யா நாயகனாக நடிக்க உள்ளார். தில் ராஜு தயாரிக்க உள்ள இந்த படம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக நாகர்ஜுனா பிறந்தநாளன்று வெளியிடப்பட்டது.

இந்தப் படத்தின் பெயரும் தேங்க்யூ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு நாயகிகள் நடிக்க உள்ளனர். அதில் ஒருவர் ப்ரியா பவானி சங்கர் ஆக இருக்கலாம் என்றும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது. இன்னொரு நாயகியாக ராகுல் ப்ரீத் சிங் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ராகுல் ப்ரீத் சிங் மற்றும் பிரியா பவானி சங்கர் இருவருமே நடிக்க ஒப்புதல் தெரிவித்தால் இது இவர்கள் இணையும் இரண்டாவது படமாகும். ஏனெனில் இவர்கள் கமலஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

பிரியா காட்டில் மழைதான்!!!

author avatar
Parthipan K