மகளிர் தனிச்சிறையில் மனநல ஆலோசகர் பணியிடம்!

0
49

மகளிர் தனிச்சிறையில் மனநல ஆலோசகர் பணியிடம்!

மகளிர் தனிச்சிறையில் தொகுப்பூதியம் அடிப்படையில் தற்காலிக மனநல ஆலோசகர் (பெண்) பணியிடம் ஒன்று காலியாக உள்ளது. இப்பணிக்கு கீழ்க்காணும் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: Master degree in sociology/Psychology/Social Work

 பணி அனுபவம் (Experience): Counsell experience in Mental Health institutions (or) community service.

 இட ஒதுக்கீடு: பொதுப்பிரிவு பெண்கள் (General Turn (Priority-women)

முன்னுரிமை பெற்றவர்கள் (Priority) :

1 ஊனமுற்ற முன்னாள் இராணுவத்தினர்,

2. ஊனமுற்ற / இறந்த முன்னாள் இராணுவத்தினரின் வாரிசுதாரர்கள்,

3. ஆதரவற்ற விதவை,

4. கலப்புத் திருமணம் செய்தவர்கள்,

5. முன்னாள் இராணுவத்தினர்,

6. இராணுவத்தில் பணிபுரிபவர்களின் வாரிசுதாரர்கள்,

7. பர்மா, இலங்கை மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து தாயகம் திரும்பியவர்கள்,

8. அரசுக்கு நிலம் வழங்கியவர்கள்,

9. மாற்றுத்திறனாளிகள்

வயது வரம்பு: 01.07.2020 அன்று குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக SC/ST/SCA பிரிவினர் 35 வயதிற்குள், MBC/BC பிரிவினர் 32 வயதிற்குள், இதர பிரிவினர் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தொகுப்பூதியம்: ரூ. 15000/-மாதம்

தகுதியுள்ள மேற்குறிப்பிட்ட வகுப்பினர் கீழ்கண்ட முகவரிக்கு கீழ்காணும் ஆவணங்களின் நகல்களுடன் 30.09.2020க்குள் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டிய ஆவண நகல்கள்: 

1. சாதிச் சான்றிதழ்,

2. குடும்ப அட்டை,

3. முன்னுரிமை பெற்றதற்கான சான்றிதழ்,

4. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்று,

5. கல்வி சான்றுகள்,

6. வேலைவாய்ப்பு அட்டை,

7. பணி அனுபவ சான்றிதழ்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: “சிறை கண்காணிப்பாளர், மகளிர் தனிச்சிறை, காந்தி மார்க்கெட் காவல் நிலையம் அருகில், திருச்சி 620008” . என்ற முகவரிக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

 

 

author avatar
Kowsalya