5 ஒவரிலேயே தெரிக்கவிட்ட பஞ்சாப்! தொடர்ந்து பின்னடவை சந்திக்கும் CSK! சோகத்தில் ரசிகர்கள்!

0
77
Punjab visible in 5 overs! CSK continues to face setbacks! Fans in grief!
Punjab visible in 5 overs! CSK continues to face setbacks! Fans in grief!

5 ஒவரிலேயே தெரிக்கவிட்ட பஞ்சாப்! தொடர்ந்து பின்னடவை சந்திக்கும் CSK! சோகத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் 14 வது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் 53 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த போட்டியில் முதலில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வென்றது. அவரு வென்றதில் பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ருத்ராட்சம் மற்றும் துளசி ஆகியோர் களமிறங்கினர். கடந்த ஆட்டத்தில் ருத்ராஜ் அதிகளவு சதத்தை அடித்ததால் இந்த முறையும் ரசிகர்கள் அதனை எதிர்பார்த்தனர். ஆனால் தற்பொழுது பஞ்சாப் விடும் மோதும் பொழுது ருத்ராஜ் அடித்த பந்தை ஷாருக் கேட்ச் செய்தார். அதனால் முதல் கட்டத்திலேயே ருத்ராஜ் தனது ஆட்டத்தை இழந்தார்.

அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் பெருமளவு சோகம் அடைந்தனர். அதனையடுத்து மொயின் அலி ஒரு ரன் கூட எடுக்க வில்லை. ராபின் உத்தப்பா 6 பந்துகளில் 2 ரன்களை எடுத்தார். அவரையடுத்து அம்பத்தி ராயுடு ஐந்து பந்து 4 ரன்கள் எடுத்தார்.மகேந்திர சிங் தோனியும் 2 ஓவர்கள் கடந்த நிலையில் தான்  12 ரன்களை எடுத்தார். இவர்களும் ஆட்டத்தை இழந்ததால் டூபிளஸி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆட்டத்தை தொடங்கினர். இவர்கள் முதலில் 17 மற்றும் பதினெட்டாம் ஓவர்களில் பத்து மற்றும் பன்னிரண்டு ரன்களை எடுத்தனர். இந்த ஆட்டம் முழுவதும் டூபிளஸி மட்டுமே தூக்கி நிறுத்தினார். ஏனென்றால் அவர் மட்டுமே அரை சதம் எடுத்து ஆட்டத்தை சூடுபிடிக்க செய்தார்.இவர் 20 ஆவது ஓவரில் 3வது பந்தை அடிக்கும் பொழுது ஆட்டத்தை இழந்தார்.

இறுதியில் 20 ஓவர்களில் 134 ரன்களை CSK எடுத்தனர். தற்பொழுது பஞ்சாப் 135 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்ய உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் பஞ்சாபிற்கு  இணையாக டப் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தற்பொழுது பஞ்சாப் 5 ஓவர்களின் முடிவில் 50 ரன்களை குவித்துள்ளது.அதன் கணக்கின்படி பார்த்தால் 13 ஓவர்களிலேயே CSK வை வீழ்த்திவிடும்.அதனால் ரன் ரெட் முறைப்படி CSK மூன்றாவது இடத்தை பிடிக்கும்.RCB இரண்டாவது இடத்தை பிடிக்கும்.இதனால் CSK ரசிகர்கள் அதிகளவு கவலையடைந்து காணப்படுகின்றனர்.