இதை 3 இடங்களில் வையுங்கள்!! பிறகு நீங்களே நினைத்தாலும் பணம் சேருவதை தடுக்க முடியாது!!

0
34

இதை 3 இடங்களில் வையுங்கள்!! பிறகு நீங்களே நினைத்தாலும் பணம் சேருவதை தடுக்க முடியாது!!

நம் வீடு செல்வ செழிப்புடன் காணப்பட சமையலறையில் சில மாற்றங்கள் செய்தாலே போதுமானது. இந்த மாற்றங்களை எப்படி செய்ய வேண்டும் எவ்வாறு செய்ய வேண்டும் இதை எப்படி செய்தால் வீட்டில் பணக்கஷ்டங்கள் வராமல் இருக்கும் என்பதற்கான தகவல்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

தினமும் காலை எழுந்தவுடன் பெண்கள் செல்கின்ற ஒரு அறை தான் சமையலறை. இந்த சமையலறையை பூஜை அறை போல் கருதி வந்தால் நமக்கு பணக்கஷ்டம் என்பதே வராது. பூஜை அறைக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தை சமையலறைக்கும் கொடுக்க வேண்டும்.

பூஜை அறையில் எப்படி சாமி படங்களை எல்லாம் துடைத்து சுத்தமாக வைத்துக் கொள்வோமோ அதே போல சமையலறையிலும் அடுப்பு முதற்கொண்டு அனைத்தையும் துடைத்து பாத்திரங்களை கழுவி முக்கியமாக துர்நாற்றம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு சமையலறையை சரியாக பார்த்துக் கொண்டாலே செல்வ வளம் அதிகரிக்க ஆரம்பிக்கும். இந்த பதிவில் முக்கியமான மூன்று விஷயங்களை சமையலறையில் செய்வதால் வீட்டில் பணக்கஷ்டம் தீரும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

1. பெண்கள் சமையலறையில் முக்கியமாக பயன்படுத்தக்கூடிய ஒன்றுதான் அஞ்சறைப்பெட்டி. இந்த அஞ்சறைப்பெட்டியில் அனைத்து விதமான பொருட்களையும் வைத்திருப்பீர்கள். அதாவது மிளகு சீரகம் இலவங்கம் போன்ற பொருட்களை வைத்திருப்பீர்கள்.

அஞ்சறைப்பெட்டியில் இந்த பொருட்களுடன் சேர்த்து இன்னொரு பொருளையும் வைத்தால் வீட்டில் நிச்சயமாக பணக்கஷ்டம் என்பது இருக்கவே இருக்காது. ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை அஞ்சறைப்பெட்டியின் அடியில் வைக்க வேண்டும்.

அஞ்சறைப்பெட்டியின் உள்ளே இருக்கின்ற பாத்திரத்தை வெளியே எடுத்து வைத்து விட்டு அஞ்சரை பெட்டியின் அடியில் ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து அதன் மேல் அந்த பாத்திரங்களை வைக்கவும். இவ்வாறு செய்வதால் வீட்டில் பணக்கஷ்டம் இருக்கவே இருக்காது.

2. அடுத்ததாக சொல்லக்கூடியது மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய துவரம் பருப்பு. முதல்முறையாக சம்பளம் வாங்கிவிட்டு அதில் வாங்கக்கூடிய முதல் பொருட்களாக மஞ்சள், துவரம் பருப்பு, உப்பு ஆகியவற்றை சொல்வோம்.

இவ்வாறு முதல் மாத சம்பளத்தில் இந்த பொருட்களை வாங்குவதால் நமக்கு பணத்தட்டுப்பாடு இருக்காது என்று கூறுவார்கள். அந்த காலங்களில் பெண்கள் பணத்தை வைக்கும் இடமாக அஞ்சறைப்பெட்டி மற்றும் துவரம் பருப்பை பயன்படுத்தி வந்தார்கள்.

இது ஒரு பணம் வருகின்ற சூட்சமம் ஆகும். இவ்வாறு நாம் செய்வதால் பணம் பல மடங்காக பெருகும். வீட்டில் பணக்கஷ்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அஞ்சறைப்பெட்டியில் ஐந்து ரூபாய் நாணயத்தை போட்டு வைத்தது போல் இந்த துவரம் பருப்பிலும் பணத்தை நேரடியாக போடாமல் அதே போல் ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை துணியில் கட்டி துவரம் பருப்பினுள் வைத்து விடவும். இவ்வாறு செய்வதால் வீட்டில் பணக்கஷ்டம் துளியும் எட்டி பார்க்காது.

3. அடுத்ததாக சொல்லக்கூடியது அன்னபூரணியின் அம்சமாக விளங்கக்கூடிய அன்னம் தான். அன்னம் எதிலிருந்து வருகிறது என்றால் அரிசிதான். இந்த அரிசியுடன் ஒரு மஞ்சள் துணியில் ஐந்து ரூபாய் நாணயம், ஜாதிக்காய் ஒன்று, மற்றும் வசம்பு இது மூன்றையும் மஞ்சள் துணியில் கட்டி அரிசியில் போட்டு விடவும்.

இந்த ஜாதிக்காய் பணத்தை பெருக்கி தருவது மிகவும் சக்தி வாய்ந்தது. ஜாதிக்காய் இருக்கும் இடத்தில் பணக்கஷ்டம் என்பது இருக்கவே இருக்காது இதற்கு இயற்கையாகவே அந்த சக்தி நிறைந்து காணப்படுகிறது. எனவே ஒரு மஞ்சள் துணியில் நாணயம் ஜாதிக்காய் வசம்பு இது மூன்றையும் சேர்த்து முடிச்சு போட்டு அரிசியில் சேர்த்து வைத்து வர அரிசி அள்ள அள்ள குறையாமல் அன்னத்திற்கு தட்டுப்பாடு இல்லாமல் இருக்கும்.

இதனால் வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக தங்குவாள். மேலும் அன்னபூரணியின் ஆசீர்வாதம் முழுமையாக கிட்டும்.

இவ்வாறு சமையல் அறையில் இந்த மூன்று மாற்றங்களை செய்துவர வீட்டில் பணக்கஷ்டம் என்பது நிச்சயமாக இருக்காது. பணத்தட்டுப்பாடுகள் எதுவும் இன்றி விரைவில் செல்வந்தராக உயர்வீர்கள்.