போட்டாச்சு அடுத்த வழக்கு.. இனி தப்பிக்க வழியே இல்லை!! கதி கலங்கும் திமுக!!

0
80

போட்டாச்சு அடுத்த வழக்கு.. இனி தப்பிக்க வழியே இல்லை!! கதி கலங்கும் திமுக!!

திமுகவின் அமைச்சர்களால் தொடர் பரபரப்பிற்கு எப்பொழுதும் பஞ்சமில்லாமல் இருக்கும். அந்த வகையில் வருமான வரித்துறை செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான நண்பர்கள் உறவினர்கள் என அவர்களின் வீடுகளில் சோதனை செய்தது முதல் அமலாக்கத் துறையினர் இவரின் வீடு என தொடங்கி தலைமை செயலகம் என சோதனை செய்தவரை பல பரபரப்பு திருப்பங்கள் அரங்கேறியது.

குறிப்பாக செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை கைது நடவடிக்கையில் ஈடுபட்ட பொழுது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்ட மருத்துவமனையில் அனுமதித்தது தான் இதனின் பெரிய ஹைலைட். தற்போது வரை இவர் வாயை திறக்க கூடாது என்று அடுத்தடுத்து காரணங்கள் கூறி இவரிடம் தற்பொழுது வரை விசாரிக்க விடுவதில்லை.

திமுக கோட்டையின் பாதுகாப்பையை விட இவருக்கு கொடுக்கும் பாதுகாப்பு தான் அதிகம். ஏனென்றால் இவர் வாயை திறந்து விட்டால் தலைமை எனத் தொடங்கி அனைவரும் சிக்குவார். ஏனென்றால் பாட்டிலுக்கு பத்து ரூபாய் பெற்ற விவகார முதல் கூர நேரிடும்.

இதனால்தான் அவரது தம்பியும் விசாரணைக்கு ஆஜராகுவதில் காலம் தாழ்த்தி வருகிறார். அரசு வேலை வாங்கி தருவதாக செந்தில்பாலாஜி ஏமாற்றியதன் விளைவு தான் இந்த சோதனை அனைத்தும் ஆரம்பித்தது. இதில் முக்கிய தரவுகள் கைப்பற்றப்பட்டதால் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இவரின் மீது மூன்று வழக்குகளை பதிவு செய்தனர்.

இத்தோடு உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் ஊழல் தடுப்பு பிரிவு வழக்கும் நான்காவதாக சேர்க்கப்பட்டுள்ளது.

மோசடி வலுக்கை எடுத்து இந்த ஊழல் வழக்கானது இவர் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பாமல் இருக்க ஓர் வழி வகையாக இருக்கும் என அரசியல் சுற்று வட்டாரங்கள் கூறுகின்றனர்.