ராகுல் காந்தி நாளை காஷ்மீர் பயணம் பதற்றம்!

Photo of author

By Parthipan K

ராகுல் காந்தி நாளை காஷ்மீர் பயணம் பதற்றம்!

Parthipan K

Updated on:

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு காஷ்மீரில் தற்போது இருக்கும் நிலைமையை ஆராய வரும்படி காஷ்மீர் ஆளுனர் சத்ய பால் மாலிக் எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்!

இதனை தொடர்ந்து எதிர்கட்சிகள் அடங்கிய சிறப்பு குழு நாளை காஷ்மீர் செல்கிறது,.அங்கு வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளது. பிறகு காஷ்மீரில் உள்ள மக்களின் நிலைமை பற்றி ஆய்வு செய்யவும் உள்ளது.

இக்குழுவில் காங்கிரஸ் முன்னால் தலைவர் திரு.ராகுல்காந்தி, திமுக சார்பில் திருச்சி சிவா, இந்திய கம்யூனிஸ்டு பொது செயலாளர் எச்.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சீத்தாராமன் யெச்சூரி போன்ற தலைவர்கள் குழுவாக செல்ல உள்ளனர்.

இதனை தொடர்ந்து காஷ்மீரில் பதற்றம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், பாதுகாப்பு உயர்த்தப்பட்டுள்ளது!