அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

0
194
Rain Alert for 12 Districts in Tamil Nadu
Rain Alert for 12 Districts in Tamil Nadu

அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

தமிழகத்தில் தற்போது நிலவும் வானிலையின் அடிப்படையில் அடுத்த 24 மணி நேரத்தில் பின்வரும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது, கடந்த 24 மணி நேரத்தில் சென்னை பரங்கிபேட்டையில் 3 செ.மீ, அருகிலுள்ள திருத்தணியில் 2 செ.மீ மற்றும் விருத்தாச்சாலத்தில் 1 செ.மீ மழையும் பதிவாகி உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலத்தில் நிலவும் காற்றின் வேகத்தில் உள்ள மாறுபாடு காரணமாக அடுத்த வரும் 24 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, திருவள்ளூர், செங்கற்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வருகிற 8 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும், இதற்கு பின்னர் வறண்ட வானிலையே நிலவும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகரின் வெப்பநிலையானது அதிகபட்சமாக 87.8 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவிலும், குறைந்த பட்சமாக 77 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவிலும் இருக்கும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleதனது கிரிக்கெட் வாழ்க்கை வீணாக இவர் தான் காரணமா? பல வருட கேள்விக்கு பதிலளித்த இர்பான் பதான்
Next articleManaiyadi Sasthiram 2025 : வீடு கட்டும் போது கவனிக்க வேண்டிய மனையடி வாஸ்து சாஸ்திர அளவுகள் 2024