தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல் 

0
102
Non-stop heavy rain in Chennai! Holiday notice for colleges-News4 Tamil Latest Tamil News Today 2022
Non-stop heavy rain in Chennai! Holiday notice for colleges-News4 Tamil Latest Tamil News Today 2022

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்

தமிழகத்தில் அடுத்து வரவுள்ள 4 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான
மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

செப்டம்பர் 10-ஆம் தேதி:

வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

11 முதல் 13 ஆம் தேதி வரை:

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை நிலவரம்:

 

சென்னையைப் பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என்று அதில் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.