மழை வெள்ள பாதிப்பு! இன்று தமிழகம் வருகிறது மத்திய குழு!

0
82

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்றைக்கு இருக்கக்கூடிய மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக மத்திய இன்று தமிழகம் வர இருக்கிறது.

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் நேரில் ஆய்வு செய்யும் இந்த மத்திய குழு முதலமைச்சர் ஸ்டாலின் உடன் வருகிற 24-ஆம் தேதி ஆலோசனை நடத்த இருக்கிறது.

வடகிழக்கு பருவமழை ஆரம்பித்த நாளில் இருந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகின்றது. தமிழ் நாட்டை ஒட்டி இருக்கக் கூடிய வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே கரையைக் கடந்தது. இதன் காரணமாக, சென்னை புறநகர் பகுதிகளில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், போன்ற மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக, சென்னை மற்றும் அதனை ஒட்டி இருக்கக் கூடிய மாவட்டங்களின் பல பகுதிகள் தண்ணீரில் தத்தளித்து வருகின்றனர்.

மழை நின்றும் தண்ணீர் வடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அதேபோல கன்னியாகுமரி, திருநெல்வேலி, விழுப்புரம், உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது டெல்டா மாவட்டங்களில் பெய்த மழையின் காரணமாக, பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கினர்.

டெல்டா மாவட்டங்களில் உண்டாகி இருக்க கூடிய பயிர் சேதங்களை ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழுவை முதலமைச்சர் ஸ்டாலின் அமைத்தார் இந்த குழு ஆய்வு செய்த பின்னர் முதலமைச்சர் ஸ்டாலினிடம் அறிக்கையை சமர்ப்பித்தது அதன் பிறகு இந்த அறிக்கை டி ஆர் பாலு மூலமாக தலைநகர் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் நேரில் வழங்கப்பட்டது.

அந்த மனுவில் தமிழக வெள்ள நிவாரண நிதியாக 2029 கோடிக்கும், உடனடியாக 650 கோடிக்கும் விடுவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதோடு தமிழ்நாட்டில் என்ன பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய குழுவை அனுப்பி வைப்பதாகவும், அந்த குழு வழங்கும் அறிக்கையின் அடிப்படையில் பேரிடர் நிதி ஒதுக்கப்படும் எனவும், அமித்ஷா உறுதி அளித்து இருந்தார்.

இதனைத் தொடர்ந்து உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவில் மத்திய நிதித்துறை செலவின பிரிவு ஆலோசகர் ஆர்பி கவுல், மத்திய வேளாண்மை துறை இயக்குனர் விஜய் ராஜமோகன், சென்னையில் இருக்கின்ற மத்திய நீர்வள அமைச்சகத்தின் நீர் ஆணையத்தின் இயக்குனர் ஆர் தங்கமணி, மத்திய எரிசக்தி துறை உதவி இயக்குனர் பாவ்யா பாண்டே,, சென்னையில் இருக்கின்ற மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மண்டல அதிகாரி ரணஞ்ஜெய்சிங்,, மத்திய ஊரக வளர்ச்சித் துறை சார்பில் செயலாளர் வி என் வரப்பிரசாத்,, உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம் பிடித்து இருக்கிறார்கள்.

தமிழகத்தில் ஏற்பட்டிருக்கக் கூடிய மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக  மத்திய குழு தமிழகம் வருகை தருகிறார்கள், அந்த சமயத்தில் மழையால் ஏற்பட்ட சேதங்களை இந்த குழு நேரில் பார்வையிடும் என்று சொல்லப்படுகிறது.

மத்திய குழு தமிழகம் வருவது குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சென்னையில் நேற்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.

அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது, வடகிழக்கு பருவமழையின் காரணமாக, உண்டான சேதங்களை பார்வையிடுவதற்காக மத்திய அரசின் 7 பேர் கொண்ட குழுவை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோளை ஏற்று இன்றைய தினம் பிற்பகலில் தமிழ்நாடு வருகை தரு கிறது.

ராஜீவ் சர்மா தலைமையில் ஒட்டு மொத்தமாக ஏழு அதிகாரிகளைக் கொண்ட இந்த குழு தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட இருக்கிறது. இந்த குழு இன்று சென்னை வந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உடன் முதலில் கலந்தாலோசிக்கும் என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர்.

அதன்பிறகு நாளையும், நாளை மறுநாளும், இரண்டு குழுக்களாக பிரிந்து சென்று பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்ய இருக்கிறது. அதன்படி சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரத்தில் ஒரு குழுவும், கன்னியாகுமரியில் இன்னொரு குழு நாளை ஆய்வு செய்ய இருக்கிறது. கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மறுநாள் ஒரு குழுவும், வேலூர் ராணிப்பேட்டை என் மற்றொரு குழுவும், ஆய்வு செய்ய உள்ளது ஒட்டு மொத்தமாக 11 மாவட்டங்களில் மத்திய குழு நேரில் ஆய்வு செய்யவுள்ளது.

வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, வருவாய் செயலாளர் குமார் ஜெயந்த், உள்ளிட்டோர் ஒருங்கிணைப்பாளராக இருந்து வழி நடத்தி செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கடுத்த பகுதிகள் தொடர்பான விபரங்களை குறிப்பு எடுத்துக்கொண்டு மத்திய குழுவை அழைத்துச் செல்லுமாறும் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திப்பதற்காக ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய குழு வருகை தரும்போது கட்சி வேறுபாடு இல்லாமல் விவசாய சங்கங்கள் அனைத்து கட்சியினரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று கொண்டு மழை வெள்ளப் பாதிப்பு தொடர்பாக எடுத்துரைக்க வேண்டும். ஆய்வு முடிவடைந்தவுடன் வருகின்ற 24ம் தேதி மத்திய குழுவை சார்ந்தவர்கள் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து ஆலோசனை செய்ய இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டிற்கு உடனடி நிவாரண தொகையாக 549 கோடியே 63 லட்சமும், முழுமையான நிவாரண தொகையாக 2629 கோடியே 29 லட்சம் விடுவிக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, வேலூர், போன்ற மாவட்டங்களில் மழை வெள்ள சேத விவரங்கள் குறித்த தகவல்கள் புதிதாக வந்து கொண்டே இருக்கின்றது இதையும் இணைத்து கூடுதலாக நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மத்திய அரசுக்கு எவ்வளவு அழுத்தம் கொடுக்க முடியுமோ அவ்வளவு அழுத்தம் கொடுத்து நிவாரணம் பெறுவோம் என்று தெரிவித்திருக்கிறார்.

கனமழையின் காரணமாக, மாணவர்களின் கல்வி சான்றிதழ்கள் வீட்டின் பத்திரங்கள் உட்பட பல ஆவணங்கள் சேதமடைந்து இருக்கின்றன மற்றும் தொலைந்து போன விவகாரத்தில் மாற்று ஏற்பாடு மேற்கொள்ளப்படும் மழைக்கால நிவாரணம் உடனடியாக வழங்கப்படும், தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து ஆறுகளிலும் பெறுக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது, அதோடு அண்டை மாநிலங்களில் இருந்து நீர்வரத்து அதிகமாக இருப்பதால் பாதிப்பு அதிகமாக உண்டாகியிருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு அணைகளை கட்டுவதற்கு திட்டமிட்டு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழக அரசு திறமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முன்னெடுத்தால் உயிரிழப்புகள், சேதங்கள் , பெரும்பாலும் தடுக்கப்பட்டிருக்கிறது.சென்னையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கை போன்றவற்றில் நடப்பு வருடம் முழுமையான கவனம் செலுத்தப்பட்டது. மழையை கடந்தும் ஆற்றில் வெள்ளம் சென்றதால் பாதிப்பு உண்டாகி இருக்கிறது. உடனடியாக மத்திய அரசிடம் இருந்து பெறப்படும் தொகை நிவாரண நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.