அடுத்தடுத்து இரண்டு படம்… ரஜினியின் சம்பளம் இவ்வளவா? அள்ளித் தெளிக்கும் லைகா!

0
148

அடுத்தடுத்து இரண்டு படம்… ரஜினியின் சம்பளம் இவ்வளவா? அள்ளித் தெளிக்கும் லைகா!

ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படம் முடிந்து அடுத்து லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்காக இரண்டு படங்களில் நடிக்க உள்ளார்.

தர்பார், அண்ணாத்த என தோல்விப் படங்களாக கொடுத்து வரும் ரஜினிகாந்த் அடுத்து வெற்றியைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதற்காக இளம் இயக்குனர்களை தேர்வு செய்து அவர்களின் இயக்கத்தில் நடித்து வருகிறார். அந்தவகையில் இப்போது அவர் தன்னுடைய 169 ஆவது படமாக நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான தயாரிக்கிறது. அண்ணாத்த படத்தின் தோல்வியால் இந்த படத்துக்கு ரஜினிக்கு சம்பளம் கணிசமாகக் குறைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்துக்கு பிறகு ரஜினி அடுத்து டான் படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

அதுபோலவே அடுத்து ரஜினியின் மூத்தமகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் ரஜினி கௌரவ வேடத்தில்தான் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த இரண்டு படங்களுக்கும் சேர்த்து ரஜினிக்கு 250 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர் தோல்விகளால ரஜினியின் சம்பளம் ஜெயிலர் திரைப்படத்தில் 80 கோடியாக குறைக்கப்பட்டுள்ளதாக தக்வல்கள் முன்பு பரவியது குறிப்பிடத்தக்கது.