ரஜினியிடம் உள்ள பைத்தியக்காரத்தனம்!! திட்டி தீர்த்த இயக்குனர்!!

Photo of author

By Gayathri

ரஜினியிடம் உள்ள பைத்தியக்காரத்தனம்!! திட்டி தீர்த்த இயக்குனர்!!

Gayathri

Rajini's madness!! The director who scolded him!!

சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இந்திய திரை உலகில் தற்பொழுது மிகப்பெரிய அளவில் ரசிகர்களை தன்னகத்தே கொண்டு இருக்கிறார். ஜாக்கிசானுக்கு பிறகு அதிக அளவு சம்பளத்தை பெற்ற நபராக இவர் பார்க்கப்படுகிறார்.

சினிமா துரை என்றாலே பலருக்கு வெற்றிகளும் இருக்கும் தோல்விகளும் இருக்கும் அப்படித்தான் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கும் மிகப்பெரிய வெற்றி படங்களில் நடித்த தன்னுடைய திறமையை சினிமா துறையில் வெளிப்படுத்தியதால் மிகப்பெரிய ஆளுமையை பெற்றவராக இவர் திகழ்கிறார். எனினும் இடையில் சிறிது காலம் இவருடைய படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. அப்படிப்பட்ட தருணத்தில் தான் ஜெயிலர் திரைப்படம் திலிப் குமார் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய பிளாக் பஸ்டர் திரைப்படமாக ரஜினிகாந்தை மீண்டும் ரசிகர்கள் எதிர்பார்க்கும் இடத்திற்கு கொண்டு சேர்த்தது. அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் அவர்களின் கூலி மற்றும் திலீப் குமார் அவர்களின் ஜெயிலர் 2 திரைப்படங்கள் ஆனது இப்பொழுது எடுக்கப்பட்டு வருகிறது.

இதுபோன்ற ஒரு தருணத்தில் இயக்குனர் பார்த்திபன் ரஜினி குறித்து ஒரு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது :-

நடிகர் ரஜினிகாந்த்தும் இயக்குனர் ஸ்ரீதரும் இணைந்து பணிபுரிந்த இளமை ஊஞ்சல் ஆடுகிறது திரைப்பட தளத்தில் நிகழ்ந்த நிகழ்வு ஒன்றை பகிர்ந்துள்ளார். சிலுவை ஊஞ்சலாடுகிறது திரைப்படத்தில் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ரஜினிகாந்த் செல்போன் பேசும்பொழுது மூன்று படிகள் முன்னேறுவது மற்றும் உடனே கீழே இறங்குவது என மாற்றி மாற்றி செய்து கொண்டிருக்கிறார். அதை பார்த்த ஸ்ரீதர் அவர்கள் ஏன் பைத்தியம் பிடித்து விட்டதா ஒன்று மேலே நின்று பேச சொல்லுங்கள் அல்லது கீழே நின்று பேச சொல்லுங்கள் என தெரிவித்திருக்கிறார். உண்மையில் அந்த தருணத்தில் நடிகர் ரஜினி அவர்கள் செய்தது அனைவருக்கும் பைத்தியக்காரத்தனமாகவே தோன்றியிருக்கிறது என பார்த்திபன் பகிர்ந்திருக்கிறார்.