வன்னியர் சமுதாய அமைச்சர்கள் கூட்டாக முதலமைச்சரை சந்தித்தனர்! முக்கிய வேண்டுகோளை விடுத்தனர்
![](https://www.news4tamil.com/wp-content/uploads/2019/11/FB_IMG_1574245534296.jpg)
கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சகுப்பத்தில் மறைந்த சுதந்திர போராட்ட வீரரும், தமிழக முன்னாள் அமைச்சருமான இராமசாமி படையாச்சிக்கு 2 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில், முழு வெண்கல சிலையுடன் மணிமண்டபம் அமைக்கும் பணியை தமிழக அரசு செய்து வந்தது. பணிகள் நிறைவடைந்த நிலையில் திரு.இராமசாமி படையாச்சியின் உருவச் சிலையை வரும் 25ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மணிமண்டபத்தை திறந்து வைக்க உள்ளார்.
![](https://www.news4tamil.com/wp-content/uploads/2019/11/FB_IMG_1574245521498.jpg)
கடலூர் மஞ்சகுப்பத்தில் நடைபெறவுள்ள இராமசாமி படையாட்சியார் அவர்களின் நினைவு மண்டபத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு, தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த அமைச்சர்களாக சீ.வி.சண்முகம், MC சம்பத், கே.சி.வீரமணி, கே.பி.அன்பழகன், இரா.துரைகண்ணு ஆகியோர்கள் கூட்டாக சந்தித்து அழைப்பிதழ் வழங்கி வேண்டுகோள் விடுத்தனர். இதனை ஏற்றுக்கொண்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.
![](https://www.news4tamil.com/wp-content/uploads/2019/11/FB_IMG_1574245527665.jpg)
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.