Bharathiraja: தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக இருந்தவர் பாரதிராஜா. பதினாறு வயதினிலே படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக நுழைந்து பல புதிய முயற்சிகளை செய்து பார்த்து ஒரு தலைமுறைக்கே பாடமெடுக்கும் இயக்குனராக மாறினார். கடலோர கவிதைகள், வேதம் புதிது, முதல் மரியாதை என கோலிவுட்டின் முக்கிய படங்களை இயக்கியவர் இவர்.
பாரதிராஜாவின் மகன் மனோஜ் சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். திரையில் பல புதிய முகங்களை அறிமுகம் செய்து வைத்து ரசிகர்களிடம் பிரபலமாக்கி அவர்களின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்த பாரதிராஜாவால் தனது மகனை ஹீரோ ஆக்க முடியவில்லை. தாஜ்மகால் படம் மூலம் சினிமாவில் தனது மகனை அறிமுகம் செய்து வைத்தார்.
ஆனால், அந்த படம் ஓடவில்லை என்பதால் மனோஜின் திரை வாழ்க்கை சரியாக அமையவில்லை. அவரும் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். ஆனால், வெற்றி கிடைகக்வில்லை. இந்நிலையில், சினிமா பத்திரிக்கையாளர் சேகுவரா பாரதிராஜா பற்றி சில தகவல்களை பகிர்ந்துள்ளார். கணவன் மனைவி இடையான உறவு என்பது நிலைத்து நிற்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதையும் தாண்டி சுமூகமான உறவு இருக்க வேண்டும். பிரச்சனை இருந்தால் பேசி தீர்த்துகொள்ளப்பட வேண்டும். அங்குதான் தவறு செய்தார் பாரதிராஜா. பல வருடங்களாக அவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
60 வயதுக்கு மேல் கண்டிப்பாக ஒரு ஆணுக்கு மனைவியின் துணை தேவைப்படும். ஏனெனில் 60 வயதுக்கு மேல் எப்போது மரணம் வரும் என சொல்லவே முடியது. பாரதிராஜா குடும்பத்தில் அப்பா ஒரு பக்கம், அம்மா ஒரு பக்கம், மகன் ஒரு பக்கம் என தனியாக வாழ்ந்தார்கள். மனோஜுக்கு மன உளைச்சல் ஏற்பட்ட போதெல்லாம் அவருக்கு ஆறுதல் சொல்ல அப்பாவோ, அம்மாவோ அருகில் இல்லை. உனக்கு பணம் கொடுத்துவிட்டேன்.. வீடு கொடுத்துவிட்டேன் என்று சொன்னால் போதுமா.?.. ஒற்றுமையாக இருந்தால்தான் அடுத்த தலைமுறையும் அதை பார்த்து கற்றுக்கொள்ளும்.
பெண் சிசுக்கொலைக்கு எதிராக கருத்தம்மா படமெடுத்தவர் பாரதிராஜா. ஆனால், பெண்கள் விஷயத்தில் அவர் கொஞ்சம் வீக்தான். நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுக்கும்போதும், நடிக்க வைக்கும்போதும் அவரின் நடத்தை பற்றி நிறைய விமர்சனங்கள் உண்டு. திரைமறைவுக்கு பின்னால் அவரை பற்றி பல கிசுகிசுக்களும் வந்தது’ என சொல்லி இருக்கிறார்.