சென்னை: நடிகர் விஜய் எங்கு சென்றாலும் அதிக கூட்டம் கூடுகிறது. அவரின் ரசிகர்களையும், தொண்டர்களையும் கட்டுப்படுத்த முடியவில்லை. நேற்று கூட சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதனாத்தில் விஜய் ரமலான் நோன்பு கொடுத்தபோது தடுப்புகளை மீறி ரசிகர்களும், தொண்டர்களும் உள்ளே புகுந்தனர். உணவு பொருட்கள் வீணாகி கிடந்த வீடியோக்களும் வெளியானது. இந்நிலையில், பிரபல சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் எக்ஸ் தளத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் தொடர்ந்து கோட்டை விடும் தவெக. ரசிகர்கள்: தொண்டர்களை கட்டுப்படுத்த தெரியாத விஜய்:
* பிகில் இசை வெளியீட்டில் கலர் ஜெராக்ஸ் அனுமதிச் சீட்டு சர்ச்சை.
* வாரிசு இசைவெளியீடு நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தபோது.. பல ரசிகர்கள் சுவரேறி உள்ளே குதித்தனர். மெயின் கேட் வழியே போலீஸை தள்ளிவிட்டு உள்ளே ஓடினர்.
* லியோ ட்ரைலர் பார்த்த இவரது ரசிகர்கள் கோயம்பேடு ரோகிணி தியேட்டர் சீட்களை துவம்சம் செய்தனர்.
* தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் அனுமதிக்கப்படவர்களை விட அதிகம் பேர் உள்ளே கூடினர். காரணம்: கலர் ஜெராக்ஸ்.
* பவுன்சர்களால் பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டார்.
* இஃப்தார் நிகழ்வில் அழைப்பிதழ் இருந்தும் உள்ளே செல்ல முடியாமல் பலர் அழைப்பிதழை கிழித்து போட்டுவிட்டு போனார்கள். அதற்கு காரணம்: தடுப்புகளை தாண்டி பலர் உள்ளே ஓடியது.
* தயவு செய்து செருப்பை வெளியே கழற்றிவிட்டு வாருங்கள் என புஸ்ஸி ஆனந்த் கெஞ்சினார்.
* இப்படியான புனித நிகழ்வு நடக்கும் அரங்கின் உள்ளே கூட.. விஜய்யை பார்த்து தளபதி தளபதி என கத்துகிறார்கள்.
* இப்படி தொடர்ந்து ஒவ்வொரு நிகழ்விலும் சொதப்பல்கள். பொதுவெளியாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் உள்ளரங்கில் முறையாக திட்டமிட்டு உரிய பாதுகாப்புடன் நடத்தும் நிகழ்வுகள் இவை.
* இதையே இப்படி சொதப்பினால் இதைவிட பெருங்கூட்ட நிகழ்வை எப்படி நடத்துவார்கள்?
* இதையெல்லாம் இனியாவது விஜய் சரி செய்வாரா அல்லது தொடர் கதைதானா?
* தனது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை கட்டுப்பாட்டுடன் நடக்க சொல்லி பொதுமக்களுக்கு இடையூறு செய்யாமல் இருக்க... அறிவுறுத்த மாட்டாரா?
* நாளை ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் இப்படி அமைதி, ஒழுங்கின்றி நெரிசலை ஏற்படுத்தும் ரசிகர்களும், அவர்களை கட்டுப்படுத்த தெரியாமல் நிகழ்ச்சிகளை நடத்தும் விஜயே பொறுப்பு.
* உங்களை காண எத்தனை லட்சம் பேர் கூடுகிறார்கள் என்பதை விட அதை ஒழுங்காக எப்படி கையாள்கிறீர்கள் என்பதே தலைமை பண்பு.
* அதையெல்லாம் காவல்துறை, பவுன்சர்கள், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா மற்றும் தொண்டர்கள் பார்த்து கொள்வார்கள். நாம் தூசி படாமல் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு சென்றால் போதும் என இனியும் நினைத்தால்..
அதற்கான பலனையும் நீங்களே அனுபவிக்கக்கூடும். இனியேனும் சுதாரித்து கொள்க’ என பதிவிட்டிருக்கிறார்.