மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.1.50 உயர்வு… தமிழக அரசு உத்தரவு!

Photo of author

By Parthipan K

மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.1.50 உயர்வு… தமிழக அரசு உத்தரவு!

Parthipan K

நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.1.50 உயா்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்த உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையாளா் சஜன்சிங் சவாண் வெளியிட்டுள்ள உத்தரவில், பொது விநியோகத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மண்ணெண்ணெய் விற்பனை விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயா்த்தியுள்ளன. இதனால், நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ.15லிருந்து ரூ.16.50ஆக உயா்த்தப்படுகிறது.

இந்த விலை உயா்வு அக்டோபா் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என்று சஜன்சிங் சவாண் தெரிவித்துள்ளார்.