“இப்போதே ஆடும் லெவனை முடிவு செய்துவிட்டேன்…” பாகிஸ்தான் போட்டி குறித்து ரோஹித் ஷர்மா!

0
184

“இப்போதே ஆடும் லெவனை முடிவு செய்துவிட்டேன்…” பாகிஸ்தான் போட்டி குறித்து ரோஹித் ஷர்மா!

பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணியை இப்போதே முடிவு செய்துவிட்டதாக கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

2022 டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 முதல் தொடங்குகிறது. இந்த முறை கோப்பைக்காக 16 அணிகள் மோதுகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் வரையிலான ஐசிசி தரவரிசையின் அடிப்படையில் எட்டு அணிகள் ஏற்கனவே போட்டியின் சூப்பர் 12 கட்டத்தை உருவாக்கியுள்ளன, ஆனால் மீதமுள்ள நான்கு இடங்கள் எட்டு அணிகளுக்கு இடையில், தலா இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை முதல் போட்டியிடும் தேர்வுப் போட்டிகள் நடக்க உள்ளன.

இந்த தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடக்க உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. கடந்த ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்தியதால் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு செல்ல முடியாமல் போனது.

இதனால் இந்த ஆண்டு இந்திய அணி பழிதீர்க்க காத்திருக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கான ப்ளேயிங் லெவன் வீரர்கள் யார் என்பதை இப்போதே தீர்மானித்து விட்டதாக கேப்டன் ரோஹித் ஷர்மா கூறியுள்ளார். மேலும் அவர் வீரர்களிடம் கடைசி நேரத்தில் தகவல்களை தெரிவிப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று கூறியுள்ளார்.

Previous articleஇந்தியாவின் ஒற்றுமையை சிதைக்கும் ஹிந்தி திணிப்பு!! தலைமை செயலகத்திலிருந்து பிரதமருக்கு பறந்த அவசர கடிதம்!!
Next article“என்னால் அழுதுகொண்டே இருக்க முடியாது…” மனம் திறந்த லைகர் பட இயக்குனர்  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here