ஒருவருக்கு தலா ரூ.3,500 உதவித்தொகை! தமிழக அரசு அறிவிப்பு

0
69
TN Assembly-News4 Tamil Online Tamil News1
TN Assembly-News4 Tamil Online Tamil News1

ஒருவருக்கு தலா ரூ.3,500 உதவித்தொகை! தமிழக அரசு அறிவிப்பு

தமிழை ஊக்குவிக்கும் வகையில் வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு உதவித்தொகையை தமிழக அரசு வழங்கி வருகிறது அந்த வகையில் இந்த ஆண்டிற்கான உதவித்தொகையை பெற தமிழர் அறிஞர்கள் அனைவரும் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தமிழறிஞர்கள்:

தமிழகத்தில் தமிழ் மொழியின் மீது தீராத பற்றுடைய தமிழறிஞர்கள் தமிழ் மொழியை மேம்படுத்தும் நோக்கோடு தொடர்ந்து தமிழ் பணியாற்றி வருகின்றனர். தமிழ் மொழி வளர்ச்சியில் இவர்களின் பங்கானது இன்றியமையாததாகும்.

இந்நிலையில் பிரதிபலன் எதிர்பார்க்காமல் பணியாற்றும் இவர்களின் முதுமை காலத்தில் உதவும் நோக்கில் தமிழக அரசு சார்பாக உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் இந்த திட்டம் ஆண்டுதோறும் செயற்படுத்தப்பட்டு வருகிறது.

உதவி தொகை :

அந்த வகையில் தற்போது 2021-2022 ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் 01.01.2021 ஆம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்கும் தமிழறிஞர்கள் அனைவரும் இந்த உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விண்ணப்பிக்கும் நபர்களுக்கு ஆண்டு வருவாய் ரூ.72,000 க்குள் இருக்க வேண்டும் எனவும் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதவி தொகை பெறுவதற்கான விண்ணப்பப்படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைதளத்திலோ www.tamilvalarchithurai.com இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் மண்டலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்கள் அல்லது மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகங்களில் வரும் ஆகஸ்ட் 31 குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் படி விண்ணப்பிக்கும் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் மாதம் தோறும் உதவி தொகையாக ரூபாய் 3,500 வழங்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.