ஓடும் ரயிலில் அரங்கேறிய  சம்பவம்! பலத்த காயங்களுடன் தண்டவாளத்தில் மீட்கபட்ட இளைஞர்!

Photo of author

By Parthipan K

ஓடும் ரயிலில் அரங்கேறிய  சம்பவம்! பலத்த காயங்களுடன் தண்டவாளத்தில் மீட்கபட்ட இளைஞர்!

Parthipan K

Updated on:

Running train event! The young man was rescued from the tracks with serious injuries!

ஓடும் ரயிலில் அரங்கேறிய  சம்பவம்! பலத்த காயங்களுடன் தண்டவாளத்தில் மீட்கபட்ட இளைஞர்!

கொல்கத்தாவில் இருந்து மால்தா என்ற இடத்திற்கு எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது.அப்போது அந்த ரயிலில் சாஜல்ஷேக் என்ற இளைஞர் பயணம் செய்து கொண்டிருந்தார்.அப்போது அந்த இளைஞர் அவருடைய கால்களை பிற பயணிகளின் இருக்கையில் வைத்துகொண்டு ,செல்போனில் பேசியபடியே வந்துள்ளார்.இதனை சக பயணிகள் கண்டித்துள்ளனர்.

அப்போது அந்த இளைஞர் பெண்கள் உட்பட அங்கிருந்த பயணிகள் அனைவரையும் தகாத வார்த்தைகளால் பேசி திட்டியும் மிரட்டியுள்ளார்.அப்போது அந்த இடத்திற்கு வந்த நபர் ஒருவர் அந்த இளைஞரிடம் இது குறித்து கேட்டார்.அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.சிறிது நேரத்தில் அந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.அப்போது அந்த நபர் குறித்து அந்த இளைஞர் தவறாக பேசினார்.

இந்நிலையில் ஆத்திரமடைந்த அந்த நபர் இளைஞரை ரயிலிலிருந்து வெளியே தள்ளியுள்ளார் .மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரயில் தண்டவாளத்தில் பலத்த காயங்களுடன் இருந்த அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த நபரை தேடி வருகின்றனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.