இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு ரஷ்யாதான் முக்கிய காரணம் ?உக்ரைன் ஜனாதிபதி பகீர் குற்றசாட்டு !!

Photo of author

By Parthipan K

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு ரஷ்யாதான் முக்கிய காரணம் ?உக்ரைன் ஜனாதிபதி பகீர் குற்றசாட்டு !!

Parthipan K

Russia is the main cause of the economic crisis in Sri Lanka? Ukrainian President Bakir accuses !!

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு ரஷ்யாதான் முக்கிய காரணம் ?உக்ரைன் ஜனாதிபதி பகீர் குற்றசாட்டு !!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ரஷ்யாவின் போர் நடவடிக்கையே காரணம் என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டி வருகின்றார்.சியோவில் நடைபெற்ற ஆசிய தலைமைத்துவ மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார்.

ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்யா பயன்படுத்திய தந்திரோபாயங்களில் ஒன்று பொருளாதார அதிர்ச்சி என தெரிவித்துள்ளார்.இதையடுத்துஉக்ரைனின் மீதான படையெடுப்பில் ரஷ்ய ராணுவம் தடுத்து வைத்துள்ள உணவு தானிய வகை பொருள்கள் உலகம் முழுதுவம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விநியோகச் சங்கலியில் நிலவும் நெருக்கடி மற்றும் சீர்குலைவு காரணமாக உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறையை சந்திக்கும் நாடுகள் அமைதியின்மைக்கும் பல இக்கட்டான சூழ்நிலைகளுக்கும் தள்ளப்படுகின்றன.

ரஷ்யாவின் போர் நடவடிக்கை என்பது உக்ரைனுக்கு மட்டும் பாதிப்பை தரவில்லை, உதாரணமாக சொல்லப்போனால் இலங்கையில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் அதிர்ச்சியூட்டும் உணவு மற்றும் எரிபொருள் விலை உயர்வு ஒரு சமூக சித்திரவதைக்கு வழிவகுத்தது.இந்நிலையில் உக்ரைன் ரஷ்யா போர் எப்போது முடிவடையும் என்று எவராலும் கணிக்க முடியாது.

எப்படி முடியும் என்று யாருக்கும் தெரியாது. இருப்பினும் உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மற்ற நாடுகளிலும் இதேபோன்ற வெடிப்புகள் சாத்தியமாகும் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தனது உரையில் தெரிவித்துள்ளார். இதனால் வருங்கால சந்ததிகள் என் நிலைமைக்கு தள்ளப்படுவார்கள் என்று சொல்லவும் முடியாது.