Sowcar Janaki : பெற்றோருக்காக தன் காதலை தியாகம் செய்த சௌகார் ஜானகி- வெளியான சோக தகவல்!

0
46
Sowcar Janaki - Cinema News
Sowcar Janaki - Cinema News
Sowcar Janaki : பெற்றோருக்காக தன் காதலை தியாகம் செய்த சௌகார் ஜானகி- வெளியான சோக தகவல்!

பழம் பெரும் நடிகைகளில் ஒருவர் நடிகர் சௌகார் ஜானகி. இவர் இவர் முதன் முதலாக தெலுங்கில் நடிகையாக அறிமுகமானார். சவுக்காரு படத்தில் நடித்ததால், இவரை ரசிகர்கள் சௌகார் ஜானகி என்றே அழைத்தனர். தமிழ் சினிமாவில், ‘வளையாபதி’ என்ற படம் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து சிவாஜி, எம்ஜிஆர் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து நட்சத்திர நடிகையாக வலம் வந்தார்.

அதுமட்டுமல்லாமல், இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட பல மொழிகளில் நடித்தார். ‘காவிய தலைவி’, ‘நடு இரவில்’, ‘உறவுக்கு கை கொடுப்போம்’ உட்பட படங்கள் இவருக்கு நல்ல அடையாளத்தை பெற்று வந்தது.

என்னதான் சினிமாவில் சூப்பராக நடித்தாலும், இவருடைய வாழ்க்கையில் தீரா சோகமும் இருக்கிறது.

இவர் தன் ஒருவரை காதலித்தாராம். இவருடைய காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதிக்கவில்லையாம். அதனால் தன் காதலை அவர் தியாகம் செய்தாராம். இதனையடுத்து, ஜானகிக்கு வீட்டில் திருமணம் செய்வதற்கு ஏற்பாடு செய்தனராம். ஜானகி தன் தோழி தந்துவிடம் திருமண பத்திரிகையை கொடுத்து காதலரிடம் கொடுத்து திருமணத்திற்கு வரச் சொல்லியிருக்கிறார். தோழியும் அந்த பத்திரிகையை ஜானகி காதலரிடம் கொடுத்துள்ளார். ஆனால், காதலரோ என்னால் அந்த கல்யாணத்திற்கு வர முடியாது. ஜானகியையும் என்னால் மறக்க முடியாது என்று கூறினாராம்.

இதன் பிறகு ஜானகிக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு கணவர் வீட்டில் நிறைய கடன் பிரச்சினையாம். இதைக் கேட்டு ஜானகி அதிர்ச்சி அடைந்தாராம். இருந்தாலும் தன் குடும்பத்திற்காக ஜானகி பிடிக்காத வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு கணவருக்காக வாழ்ந்துள்ளார். இதன் பிறகு கணவரின் கடனை சமாளிப்பதற்காக, கணவர் சம்மதத்துடன் சினிமாவில் நுழைந்து பல படங்களில் நடித்து நடித்தினாராம்.

author avatar
Gayathri