நாக சைதன்யாவோடு இணைந்த வீட்டை அடம்பிடித்து வாங்கிய சமந்தா!

0
85

நாக சைதன்யாவோடு இணைந்த வீட்டை அடம்பிடித்து வாங்கிய சமந்தா!

நடிகை சமந்தாவின் விவாகரத்து ஒரு ஆண்டும் ஆகியும் இன்னும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து பிரபலமானார். இவர் பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பில் இணைந்து நடித்த போது நட்பாகி அந்த நட்பு காலப்போக்கில் காதலாக மலர்ந்தது.

அதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில் நான்காண்டு மண வாழ்க்கைக்குப் பிறகு இருவரும் கடந்த ஆண்டு விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். இந்த விவாகரத்துக்கு காரணம் என்று பல்வேறு வதந்திகள் வெளிவந்த நிலையில், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் வேண்டிக்கொண்டனர்.

இந்நிலையில் இப்போது சமந்தா முன்னாள் கணவர் நாக சைதன்யாவோடு இணைந்து ஐதராபாத்தில் இணைந்து வாழ்ந்த விலையுயர்ந்த அபார்ட்மெண்ட்டை அதிக விலை கொடுத்து அடம்பிடித்து விலைக்கு வாங்கியுள்ளாராம் சமந்தா. இதை ஒரு நேர்காணலில் பிரபல நடிகர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.