அவ்வளவு ரிஸ்க் எடுத்தும் ஏமாந்து போன நடிகை சமந்தா! நடந்தது என்ன?

0
92
Samantha
Samantha

அவ்வளவு ரிஸ்க் எடுத்தும் ஏமாந்து போன நடிகை சமந்தா! நடந்தது என்ன?

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கலக்கி வருபவர் நடிகை சமந்தா.இவர் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.

காதல் திருமணம் செய்த நாக சைத்தன்யாவை பிரிந்த பின்னர் இவருடைய கெரியர் குறித்து பலவிதமாக பேசப்பட்டது. ஆனால் ஏற்கனவே இருந்ததை விட விஸ்வரூபமெடுத்துள்ள சமந்தா, தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ‘சாகுந்தலம்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் பல்வேறு இடங்களில் நடிகை சமந்தா ரொம்பவே ரிஸ்க் எடுத்து நடித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவர் ஏமாந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

சமந்தா திருமணம் செய்துகொள்வதற்கு முன்பே தமிழ் மற்றும் தெலுங்கில் டாப் ஹீரோயினாக ஒரு கலக்கு கலக்கி விட்டார். தமிழில் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் என பல முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாடி செட்டில் ஆகிவிட்டார். அதேபோல், தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களின் ஃபேவரைட் நாயகியாக சமந்தா இடம் பிடித்துள்ளார். இதனால், கோலிவுட் டோலிவுட் இரண்டிலுமே டாப் நடிகையாக சமந்தா பிரபலமானார்.

இந்த பிரபலமான சூழலில் நாக சைத்தன்யாவுடன் காதல், திருமணம் என அனைவரையும் மேலும் பிரமிக்க வைத்தார் சமந்தா, அதே நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அவரை பிரிவதாகவும் அறிவித்து அனைவருக்கும் ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்தார். அதன் பிறகு அவருடைய திரைப்பயணத்தில் எதாவது சறுக்கல் ஏற்படும் என எதிர்பார்த்த நிலையில் மேலும் ஆக்ரோஷமாக கவர்ச்சி,குத்தாட்டம் என தனது மார்க்கெட்டை மேலும் உயர்த்தி கொண்டார்.

இவ்வாறு ரொமாண்டிக் ஹீரோயின், ஒரேயொரு பாட்டுக்கு குத்தாட்டம் என கலந்துக்கட்டினாலும், நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களையும் தேர்வு செய்து நடிப்பதில் கவனமாக இருந்தார். அந்த வகையில் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் உருவாகி வருவதே ‘சாகுந்தலம்’ திரைப்படம், காளிதாசனின் பிரபலமான நாடகமான சகுந்தலாவை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திரைப்படத்தை குணசேகர் இயக்கி வருகிறார். பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இது, ரொம்பவே பிரமாண்டமாக இருக்கும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

அவ்வளவு ரிஸ்க் எடுத்தும் ஏமாந்து போன நடிகை சமந்தா! நடந்தது என்ன?
அவ்வளவு ரிஸ்க் எடுத்தும் ஏமாந்து போன நடிகை சமந்தா! நடந்தது என்ன?

இந்நிலையில்,புராணக் கதையை வைத்து எடுக்கப்படும் ‘சாகுந்தலம்’ படத்திற்காக சமந்தா ரொம்பவே ரிஸ்க் எடுத்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக புராணக் கதையை அடிப்படையாக வைத்து உருவாகுவதால், சண்டை காட்சிகளில் சமந்தா படு மிரட்டலாக நடித்துள்ளதாகத் தெரிகிறது. இதற்காக சமந்தா எடுத்த ரிஸ்க்கை பார்த்து படக்குழுவினரே மிரண்டு விட்டார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் இந்தப் படம் தனக்கு மிகப் பெரிய வெற்றியை கொடுக்கும் என சமந்தா எதிர்பார்த்திருந்தார்.

ஆனால் அவருடைய எதிர்பார்ப்பை பொய்யாக்குவதாக , ‘சாகுந்தலம்’ படத்தை பார்த்த சமந்தா தெரிவித்துள்ளார். இதில் மேக்கிங் சொதப்பிவிட்டதாக தெரிவித்த அவர் இதனால் ரிஸ்க் எடுத்து நடித்ததெல்லாம் வேஸ்டாகிவிட்டதே என ஏமாற்றத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் அவருடைய இந்த கருத்துக்கு பட தயாரிப்பு நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது, அதில் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலை நடந்து வருவதாகவும், கிராபிக்ஸ் பணிகள் அதிகம் இருப்பதால், சமந்தாவின் அதிருப்தி குறித்த செய்திகளெல்லாம் வதந்தி எனவும் விளக்கம் அளித்துள்ளது.

அதுமட்டும் இல்லாமல் சீக்கிரமே தரமான அப்டேட்டுடன் திரும்பி வர்றோம் எனவும் அந்த நிறுவனம் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது . இதனால், சமந்தாவின் ரசிகர்கள் இப்போதைக்கு ஓரளவு சமாதானம் ஆகியுள்ளனர்.