TVK ADMK: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணி கட்சியில் மாற்றம் உண்டாகும் என்பது தற்போது உள்ள நிலையை வைத்து கணிக்க முடிகிறது. திமுக கூட்டணியை யாராலும் அசைக்க முடியாது என கூறி வந்த நிலையில் தற்போது காங்கிரஸ் உடன் இருந்த நல்லுறவை முடிக்கும் நிலைக்கு தள்ளி இருக்கிறது. அதேசமயம் அதிமுகவும் பாஜகவுடன் கூட்டணி வைத்தும் சமரசம் உண்டாகவில்லை. எடப்பாடி எங்கள் தலைமையில் தான் கூட்டணி என கூறி வருகிறார்.
ஆனால் பாஜக இலை மீது தாமரை மலரும் கட்டாயம் கூட்டணி ஆட்சி என்கின்றனர். இதிலேயே இரு கட்சிகளுக்கிடையே விரிசல் உண்டாகியுள்ளது. இதனால் எடப்பாடி பிரம்மாண்ட கட்சி ஒன்று எங்கள் கூட்டணிக்குள் வரப்போவதாகவும் எடப்பாடி கூறுகிறார். இவை அனைத்தையும் ஒன்று சேர்க்கையில் முடிச்சு போடும் விதமாக தமிழக வெற்றிக் கழகம் தான் உள்ளது. திமுகவுடன் காங்கிரஸும் பாஜகவுடன் அதிமுகவும் வெளியேறி தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள்.
இவர்களுடன் பாமக தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் இணைய உள்ளது. அதிலும் பாமக வானது, வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தில் பங்கு கிடைக்கும் என கூறுகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறுவதற்கு விஜய் தான் காரணமாம். அரசியலுக்குள் நுழைந்த உடன், எங்களுடன் கூட்டு வைப்பவர்களுக்கு ஆட்சியில் அதிகாரம் எனக் கூறியது விஜய் தான். இவரைத் தவிர மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் யாரும் அதிகாரத்தில் பங்கு தருகிறோம் என கூறவில்லை. இதை வைத்துப் பார்க்கையில் பாமக கூறுவது விஜய்யின் கூட்டணி தான்.
அதாவது வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் பாஜகவிற்கு எதிராக அதிமுக காங்கிரஸ் பாமக தேமுதிக என அனைவரும் விஜய்யுடன் கூட்டு வைக்க போகிறார்கள்.