தனது மகனின் பெயரையும், குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்த ஷ்ரேயா கோஷல்!

0
107

பிரபல பாடகியான ஸ்ரேயா கோஷல் அவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இப்பொழுது தனது மகனின் பெயரையும் மற்றும் தனது மகனுடன் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

ஸ்ரேயா கோஷல் மற்றும் ஷிலாதித்யா முகோபாத்யாயா ஆகியோருக்கு பிப்ரவரி 5 ஆம் நாள் 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

மே 22 அன்று பாடகி ஸ்ரேயா கோஷல் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இன்று ஸ்ரேயா கோஷல் அவர்கள் தனது மகனின் பெயர் “தேவ்யான் முகோபாத்யாயா” என அறிவித்தார். மேலும் தனது மகன் மற்றும் கணவர் ஆகியோர் உடன் குடும்ப படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

தங்களது குடும்ப படத்தை பதிவிட்டு ஷ்ரேயா கோஷல் அவர்கள் கூறியது, மே 22ஆம் அன்று பிறந்த எங்கள் வாழ்க்கையை மாற்றினார். அவர் பிறந்து எங்கள் இதயங்களை அன்பினால் நிரப்பினார். தாய் தந்தையால் மட்டுமே தங்கள் குழந்தைகளின் அன்பை உணர முடியும். இந்த தூய்மையான கட்டுப்பாடற்ற இந்த அன்பு ஒரு கனவு போலவே உணரச் செய்கிறது. ஷிலாதித்யா இந்த அழகான வாழ்க்கையை பரிசளித்த என் கணவருக்கு நான் மிகவும் நன்றி உள்ளவனாக இருக்கிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CPm_D3TA1H7/?utm_source=ig_web_copy_link