நவீன வசதிகளோடு கூடிய ஸ்மார்ட் மீட்டர்!! அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்ட அறிவிப்பு!!

0
150
#image_title

நவீன வசதிகளோடு கூடிய ஸ்மார்ட் மீட்டர்!! அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்ட அறிவிப்பு!!

எரிசக்தி, மதுவிலக்கு மற்றும் ஆயத்துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், “ஸ்மார்ட் மீட்டர் என்பது நவீன காலத்திற்கு ஏற்ப புதிய வடிவமைப்போடு அமைக்க வேண்டும் என்பது மின்சார வாரியத்தினுடைய இலக்கு.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத அளவிற்கு புதிய வடிவமைப்போடு ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கான டெண்டர் தயாரிப்பதற்கான இறுதி கட்ட பணிகள் நடைபெற்றுள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள 3 கோடி மின் இணைப்புகளுக்கும் புதிய வடிவமைப்போடு, புதிய நவீன வசதிகளோடு கூடிய ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகள் தொடங்கும்.

அதேபோல, சென்னையில் புதைவடை கம்பிகள் அமைக்கும் பணிகளும் விரைவில் முடிக்கப்படும்”, என்றார்.