சூரிய கிரகணம் வெறும் கண்களில் பார்க்கலாமா?

Photo of author

By CineDesk

சூரிய கிரகணம் வெறும் கண்களில் பார்க்கலாமா?

CineDesk

Updated on:

வரும் 26ஆம் தேதி சூரியன், நிலவு, பூமி என மூன்றும் ஒரே நேர் கோட்டிற்கு வருகின்றன. இதனால் சூரிய வெளிச்சத்தை சில மணி நேரம் நிலவு மறைக்கும். சூரியனை முழுவதுமாக நிலவு மறைப்பதால் முழு சூரிய கிரகணம் ஏற்படவிருக்கிறது.

சூரியனை நிலா முழுமையாக மறைத்தால் அது முழு சூரியனின் மையப் பகுதியை மட்டும் சந்திரன் மறைத்து விளிம்பில் வளையம் போல விழுகிறபோது அது வளைய சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது.

இது ஒரு அபூர்வ நிகழ்வாகும் இந்தியாவில் தமிழ்நாட்டிலும் கர்நாடக மாநிலத்தின் சில இடங்களிலும் கேரளாவின் சில பகுதிகளிலும் இந்த சூரிய கிரகணம் தெரியும்.

தமிழ்நாட்டில் பொறுத்தவரை அதிக அளவில் இந்த சூரிய கிரகணத்தை பார்க்க முடியும் 26 ஆம் தேதி அன்று காலை 8 மணி முதல் 11. 16 வரை மணி வரை இதை பார்க்கமுடியும்.

தமிழ்நாட்டில் குறிப்பாக கோவை, புதுக்கோட்டை, ஈரோடு, திருச்சி, நீலகிரி, திருப்பூர், கரூர், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் சூரிய கிரகணம் முழுமையாக தெரியும்.

மற்ற இடங்களில் பகுதி சூரிய கிரகணத்தை காண தமிழகத்தில் 11 இடங்களில் விஞ்ஞான பிரச்சார் அறிவியல் கணித அறிவியல் நிறுவனம் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் ஏற்பாடு செய்திருந்தது.

இது குறித்து விஞ்ஞான பிரச்சார் விஞ்ஞானி டிவி வெங்கடேசன் மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர் சௌந்தரராஜ பெருமாள் ஆகியோர் கூறுகையில்.

இந்த சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க கூடாது என்றும் அதற்கென்று இருக்கும் கண்ணாடி வழியாக பார்க்க வேண்டும் அதற்காக தமிழகத்தில் முழு சூரிய கிரகணம் தெரியும் 10 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சென்னையிலும் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார் சூரிய கிரகணம் வரும் நேரத்தில் வெளியே செல்லக்கூடாது என்பது சொல்வது தவறு சாதாரணமாக வெளியே செல்லலாம் வெறும் கண்களால் மட்டும் பார்க்கக் கூடாது என்று கூறினார்.

இதற்கு பிறகு 2031 ஆம் ஆண்டு தான் தமிழ்நாட்டில் மதுரை மற்றும் தேனி சூரிய கிரகணத்தை பார்க்க முடியும் என்றும் அவர் கூறினார்.