தமிழ் புத்தாண்டையொட்டி திருநேர் அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜை!!

0
148
#image_title

தமிழ் புத்தாண்டையொட்டி திருநேர் அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜை-சூரியன் அண்ணாமலையாரை தரிசனம் செய்தார் – ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம்.

சோபகிருது வருடம் தமிழ் புத்தாண்டையொட்டி இன்று அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் கிரிவலப்பாதையில் அமைந்துள்ள திருநேர் அண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

ஒவ்வொரு தமிழ் புத்தாண்டையொட்டி திருநேர் அண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையார் சன்னதியில் காலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவ லிங்கத்தின் மீது விழும்.

இந்த நிகழ்வை சூரியன் சிவ லிங்கத்தினை புத்தாண்டு அன்று தரிசனம் செய்யும் நிகழ்வாக கருதுவார்கள். இந்த அரிய நிகழ்வை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இந்த நிகழ்வையொட்டி அதிகாலையில் திருநேர் அண்ணாமலையார் கோயில் திறக்கப்பட்டு திருநேர் அண்ணாமலையாருக்கு மல்லி, தாமரை பூ உள்ளிட்ட பல்வேறு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

வருடத்திற்கு ஒரு முறை சூரியன் அண்ணாமலையாரை தரிசனம் செய்யும் நிகழ்வுவை ஏராளாமான பக்தர்கள் கண்டு களித்தது திருநேர் அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர்.

author avatar
Savitha