தமன்னா மீது ஸ்ரீரெட்டி போலீசில் புகாரா?

Photo of author

By CineDesk

தமன்னா மீது ஸ்ரீரெட்டி போலீசில் புகாரா?

CineDesk

ஆந்திராவைச் சேர்ந்தவர் நடிகை ஸ்ரீரெட்டி இவர் தெலுங்கு மற்றும் தமிழ் நடிகைகள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

சமீபத்தில்கூட ஒரு இணையதள சேனலில் விஷாலின் அந்தரங்கத்தை பற்றி கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.ஐதராபாத்தில் வசித்து வந்த ஸ்ரீரெட்டி அங்கிருந்து வெளியேறி தற்போது சென்னை வளசரவாக்கத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார் இவரது வீட்டின் அருகே தமன்னா நடிக்கும் வெப் தொடரின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீரெட்டி முகநூல் பக்கத்தில் சென்னையில் உள்ள எனது வீட்டின் அருகே தமன்னா நடிக்கும் வெப் தொடரின் படப்பிடிப்பு நடந்து வருகிறது என்றும் அவர்களின் தொல்லை தாங்க முடியவில்லை என்றும் கடந்த 10 நாட்களாக நான் தொல்லை அனுபவித்து வருகிறேன்.

இனி என்னால் பொறுக்க முடியாது அவர்களிடம் நேரில் சென்று பேசி இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டப் போகிறேன் என்று பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் அவருக்கு சொந்தமான சொகுசு சொந்தக்கார் சில மர்ம நபர்கள் சேதப்படுத்தபட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்ரீரெட்டி போலீசில் புகார் அளித்துள்ளார் ஸ்ரீ ரெட்டியின் சமூக வலைதளப் பதிவுக்கும் அவரின் கார் சேதப்படுத்திதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.