நித்யானந்தா இறந்துவிட்டது உண்மையா?!. 4 ஆயிரம் கோடி சொத்துக்கள் யாருக்கு?…

Photo of author

By அசோக்

நித்யானந்தா இறந்துவிட்டது உண்மையா?!. 4 ஆயிரம் கோடி சொத்துக்கள் யாருக்கு?…

அசோக்

nithyananda

திருவண்ணாமலையில் தனது ஆன்மிக பணியை துவங்கியவர் நித்யானந்தா. அதன்பின் பக்தர்களின் ஆதரவால் பெங்களூர் மற்றும் தமிழகத்தின் பல ஊர்களிலும் ஆஸ்ரமங்களை நிறுவினார். பல இளம்பெண்கள், ஆண்கள், மற்றும் வெளிநாட்டை சேர்ந்த பலரும் கூட அவரின் ஆசிரமத்தில் சீடர்களாக மாறினார்கள். இதன் காரணமாக மக்களிடம் பிரபலமாக துவங்கினார் நித்யானந்தா.

அப்போதுதான் நடிகை ரஞ்சிதாவையும் நித்யானந்தாவும் ஒரு அறையில் இருப்பது போல ஒரு வீடியோவும் சன் டிவியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அவர் மீது பாலியல் புகார்களும் குவிந்தது. ஆனால், இந்தியாவிலிருந்து வெளியேறிய நித்யானந்தா ஒரு தீவை விலைக்கு வாங்கி அதற்கு கைலாஷ் என பெயர் வைத்து அதுவே தனது நாடு எனவும் அறிவித்தார். அங்கிருந்து அவர் சீடர்களிடம் பேசும் வீடியோக்கள் அடிக்கடி யுடியூப்பில் வெளியாகி வந்தது.

இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு அவர் இறந்துவிட்டார் என்கிற செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்து தர்மத்தையும், சமாதானத்தையும் காப்பாற்றுவதற்காக தனது நித்யானந்தா உயிரையே தியாகம் செய்திருக்கிறார்’ என நித்யானந்தாவின் சகோதரி மகன் சுந்தரேஸ்வரன் வீடியோ காலில்  பேசியிருக்கிறர். இது நித்யானந்தாவை பின்பற்றுபவர்களுக்கும், உலகமெங்கும் உள்ள அவரின் சீடர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. ஆனால், இதுபற்றி கைலாசா நாட்டில் உள்ள நித்யானந்தா ஆஸ்ரமம் எந்த விளக்கும் கொடுக்கவில்லை.

nithyananda
nithyananda

இந்நிலையில்தான் பல முக்கிய தகவல்கள் வெளியே கசிந்திருக்கிறது. தினமும் ஆன்மிக போதனைகளை வீடியோவில் பேசும் நித்யானந்தா கடந்த சில மாதங்களாக வீடியோவில் பேசவில்லை. அவரின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு டையாலசைஸ் செய்யப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியானது. எனவே, அவர் எப்போதோ பேசிய பழைய வீடியோக்களை யுடியூப்பில் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில்தான் அவர் இறந்துவிட்டார் என்கிற செய்தி வெளியாகியுள்ளது. நித்யானந்தா மீது சில பாலியல் புகார்கள் நீதிமன்றத்தில் இருக்கிறது. எனவே, கைதிலிருந்து தப்பிக்கவே இப்படி பொய்யான செய்தியை பரப்புகிறார்கள் எனவும் சிலர் சொல்கிறார்கள். கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் சில இடங்களில் உள்ள நித்யானந்தாவின் ஆஸ்ரமத்தில் இருக்கும் சீடர்கள் சிலர் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. நித்யானந்தா இறந்து உண்மை எனில் அவரின் 4 ஆயிரம் கோடி சொத்து அவரின் முதன்மை சீடர் ரஞ்சிதாவுக்கு செல்லும் என சொல்லப்படுகிறது. அதேநேரம் 4 பேர் அதற்கு போட்டி போடுவார்கள் எனவும் சொல்லப்படுகிறது.