மத்திய பல்கலை கழகத்தில் மாணவி தூக்குபோட்டு தற்கொலை!

0
130

மத்திய பல்கலை கழகத்தில் மாணவி தூக்குபோட்டு தற்கொலை!

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் அருகேயுள்ள நீலக்குடி தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த முரளி என்பவரின் மகள் மைதிலி வயது 19 ஒருங்கிணைந்து பிஎஸ்சி பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த அவர் நேற்று முன்தினம் இரவில் உணவு சாப்பிட வரவில்லை என தெரிகிறது இதையடுத்து சக மாணவிகள் அறைக்குச் சென்று பார்த்தனர் அப்போது மைதிலி விடுதி அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் கதறி அழுதபடி பல்கலைக் கழக நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர் பின்னர் நன்னிலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அதன்பேரில் போலீசார் பல்கலைக்கழகத்துக்கு விரைந்து சென்று தூக்கில் தொங்கிய மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மாணவி தொடர்பாக அவரது நண்பர்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசியர்களிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து ஊரில் வசிக்கும் அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்து அவர்கள் உடனடியாக திருவாரூர் வந்தனர்.

author avatar
CineDesk