கோழிக் குழம்புக்கு பதிலாக கத்தரிக்காய் குழம்பு! மனைவியை கொன்ற கணவன்!!

0
35

கோழிக் குழம்புக்கு பதிலாக கத்தரிக்காய் குழம்பு! மனைவியை கொன்ற கணவன்!!

 

கோழிக் குழம்புக்கு பதிலாக கததரிக்காய் குழம்பு வைத்ததை அறிந்த கணவன் ஆத்திரமடைந்து மனைவியை கோடாரியால் வெட்டி கொன்ற சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

தெலுங்கானா மாநிலம் மஞ்சரில் மாவட்டத்தின் கிஷ்தம்பேட் மாவட்டத்தை சேர்ந்த போஷம் அவர்களும் அவரது மனைவி சங்கரம்மா அவர்கள் வசித்து வருகின்றனர்.

 

கடந்த புதன் கிழமை போஷம் அவர்கள் மனைவியிடம் கோழிக் குழம்பு செய்யும்படி கோழிக்கறி வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் மனைவி சங்கரம்மா அன்று இரவு கோழிக் குழம்புக்கு பதிலாக கத்தரிக்காய் குழம்பு வைத்துள்ளார்.

 

இதையடுத்து மது போதையில் இரபோஷம் அவர்கள் மனைவி சங்கரம்மா அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். பின்னர் இருவரும் அவர்களது அறையில் உறங்க சென்றுவிட்டனர்.

 

மது போதையில் இருந்த போஷம் அவர்கள் அதிகாலையில் திடீரென்று கண் விழித்துள்ளார். பின்னர் வீட்டில் இருந்த கோடாரியை வைத்து மனைவி சங்கரம்மாவை சரமாரியாக வெட்டியுள்ளார். மனைவி சங்கரம்மாவை கழுத்தில் கோடாரியால் வெட்டிய போஷம் அவர்கள் வீட்டை விட்டு வெளியே ஓடிவிட்டார்.

 

தாயின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்து ஓடி வந்த இளைய மகன் சந்தோஷ் தாய் சங்கரம்மா இரத்த வெள்ளத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து உடனடியாக அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இரத்த வெள்ளத்தில் இருந்த சங்கரம்மா அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

அங்கு சங்கரம்மாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் ஓடி சென்ற போஷம் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.