பாஜக எம்எல்ஏ மீது திடீர் துப்பாக்கி சூடு!! பரபரப்பில் கட்சி நிர்வாகிகள்!!

Photo of author

By Rupa

பாஜக எம்எல்ஏ மீது திடீர் துப்பாக்கி சூடு!! பரபரப்பில் கட்சி நிர்வாகிகள்!!

Rupa

Sudden firing on BJP MLA!! Party executives in a frenzy!!

லக்கிம்பூர் கேரியில் உள்ள கஸ்தா தொகுதியின் பாஜக எம்எல்ஏ தனது வீட்டிற்கு அருகில் மது அருந்திக்கொண்டிருந்த இருவர் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறி கொலை முயற்சி புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள ஷிவ் காலனியில் உள்ள அவரது வீட்டின் அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். மது அருந்தியவர்களை எதிர்த்து கேள்வி கேட்டதால் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு இதுகுறித்து புகார் அளித்துள்ள நிலையில், தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறியுள்ளார்.

போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், புதன்கிழமை இரவு உணவிற்குப் பிறகு தனது மனைவியுடன் வழக்கமான நடைப்பயணத்திற்குச் சென்றபோது, ​​தனது வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் இரண்டு இளைஞர்கள் மது அருந்தியுள்ளனர்.இதுகுறித்து கேள்வி எழுப்பிய பொழுது, ​​​​இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அந்த நபர்கள் துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.

சௌரப் சிங், இது என் உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் உள்ளது. அவர் தினமும் மாலை நடைப்பயிற்சி மேற்கொள்வது நன்கு தெரிந்ததால், என்னை வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். சம்பவத்தின் போது, ​​அவரது பாதுகாவலர் தூரத்தில் இருந்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து இரவு உணவுக்குப் பிறகு மனைவியுடன் வாக்கிங் செல்வதாக எம்எல்ஏ குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். சந்தேக நபர்களை அடையாளம் காண சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். எம்எல்ஏவின் புகாரின் பேரில் போலீசார், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள காட்சிகளை ஆய்வு செய்தனர். இதுவரை, இரண்டு இளைஞர்கள் அடையாளம் காணப்படவில்லை.

லக்கிம்பூர் கேரியின் சதர் கோட்வாலி பகுதியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தேக நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை நிர்வாகம் உறுதியளித்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.